"இனி எவருக்கும் இந்த துயரம் நிகழக் கூடாது".. ஸ்டேன் சாமி மறைவு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
சென்னை: சமூக போராளி ஸ்டேன் சாமியின் மரணத்திற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த சமூக போராளி ஸ்டேன் சாமி இன்று மானம் அடைந்தார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 83 வயதான இயேசு சபை பாதிரியார் ஸ்டேன் சாமி கடந்த 2020ம் ஆண்டு என்ஐஏ மூலம் ஜார்கண்டில் கைது செய்யப்பட்டார். பார்க்கின்ஸன் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டும் கூட இவருக்கு பெயில் தரப்படவில்லை.

2018ல் பீமா - கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் இவர் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கில் என்ஐஏ அமைப்பு இவரை விசாரித்து வந்த நிலையில் பெயில் மட்டும் மறுக்கப்பட்டு வந்தது.

கஸ்டடியில் கீழ் மருத்துவ சிகிச்சைக்கு மற்றும் இவர் மிகவும் தாமதமாக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு பெயில் வழங்க வேண்டும் என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்த நிலையில் இன்று மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் ஸ்டேன் சாமியின் மறைவிற்கு பல்வேறு மாநில முதல்வர்கள், தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவரின் மறைவிற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்துள்ள போஸ்டில், பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். ஆழ்ந்த இரங்கல்.
அடித்தட்டு மக்களுக்காகப் போராடிய அவருக்கு நேர்ந்த துயரம் இனி எவருக்கும் நிகழக் கூடாது, என்று உருக்கமாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications