3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் தொடங்கியது.. சென்னையிலிருந்து லண்டன் புறப்பட்டார் முதல்வர் பழனிச்சாமி!
முதல்வர் பழனிச்சாமி முதல்முறையாக மூன்று நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
Recommended Video
சென்னை: முதல்வர் பழனிச்சாமி முதல்முறையாக மூன்று நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மொத்தம் 14 நாட்கள் அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக இன்று காலை அவர் சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார்.
முதல்வர் பழனிச்சாமி ஆட்சி பொறுப்பேற்று முழுதாக தன்னுடைய ஆட்சியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார். ஆட்சி நிர்வாகத்தையும், கட்சியையும் தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் அவர் தற்போது வைத்துள்ளார்.

இந்த நிலையில்தான் முதல்முறையாக முதல்வர் பழனிச்சாமி வெளிநாடு சுற்றுப்பயணம் செய்கிறார். மொத்தம் 3 நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று தொடங்கும் பயணம் வரும் செப்டம்பர் 10ம் தேதி வரை நீடிக்கும்.
லண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து முதல்வர் முதலில் லண்டன் செல்கிறார். அங்கு அவர் மருத்துவ துறை சார்ந்த ஒப்பந்தங்களை செய்ய உள்ளார்.
அங்கு சர்வதேச மனித வள மேம்பாட்டு நிறுவனத்தினரை சந்தித்து மருத்துவம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளார். அதன்பின் லண்டனிலிருந்து புறப்பட்டு செப்டம்பர் 2ஆம் தேதி நியூயார்க் செல்கிறார்.
அங்கு அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அவர் சந்திப்பார். அவர்களுடன் முக்கிய ஆலோசனைகளை செய்ய உள்ளார். அதேபோல் அமெரிக்க வாழ் தமிழ் மக்களிடம் உரையாட உள்ளார்.
செப்டம்பர் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் துபாய் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். துபாயில் உள்ள தொழில் முனைவோர்களிடம் பல்வேறு ஒப்பந்தங்களை செய்ய உள்ளார். அதன்பின் தனது பயணத்தை முடித்துவிட்டு செப்டம்பர் 10ம் தேதி அவர் தமிழகம் திரும்புவார்.












Click it and Unblock the Notifications