தமிழகத்தில் மளமளவென குறையும் கொரோனா! பாசிட்டிவ் விகிதமும் 6க்கு கீழ் சரிந்தது! பொதுமக்கள் நிம்மதி
சென்னை: தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், உயிரிழப்புகளும் கட்டுக்குள் வந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஓமிக்ரான் கொரோனா பின்னர் பல மாதங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. இதற்கிடையே வைரஸ் பாதிப்பு மீண்டும் சில வாரங்களாக அதிகரிக்கத் தொடங்கியது.
இதனால் பொதுமக்களிடையே ஊரடங்கு தொடர்பான அச்சமம் எழுந்தது. இந்தச் சூழலில் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து குறைந்தே வருகிறது.

தினசரி பாதிப்பு
பல நாட்களுக்குப் பின்னர் நேற்று மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2000க்கு கீழ் குறைந்து இருந்தது. இந்நிலையில், இன்றும் வைரஸ் பாதிப்பு குறைந்தே உள்ளது. இன்று மாநிலத்தில் மொத்தம் 27,975 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அந்தமானில் இருந்து திரும்பிய ஒருவர் உட்பட மொத்தம் 1903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதுவரை மாநிலத்தில் 35,34,246 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்தே வருகிறது. நேற்று தமிழகத்தில் மொத்தம் 15,409 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அது 15,093ஆக குறைந்து உள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் சுமார் 4901 பேரும் செங்கல்பட்டில் 1698 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழப்புகள் இல்லை
மேலும், இன்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 2219 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு உள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து ஒட்டுமொத்தமாகக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,81,121ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களைப் போலவே நல்வாய்ப்பாக இன்றும் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. மாநிலத்தில் பதிவான கொரோனா உயிரிழப்புகள் 38032ஆகவே உள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு
தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு 500க்கு கீழாகக் குறைந்துள்ளது. ஒரே நாளில் அங்கு 415 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து செங்கல்பட்டில் 202 பேருக்கும் கோவையில் 177 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது தவிர விருதுநகரில் 96 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மாநிலத்தின் பாசிட்டிவ் விகிதம் 5.6ஆக குறைந்துள்ள நிலையில், அதிகபட்சமாகத் திருப்பூரில் பாசிட்டிவ் விகிதம் 15.4ஆக உள்ளது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications