Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சோலார் மின்சாரம்.." சிக்சர் அடிக்கும் தமிழ்நாடு.. வியந்து பார்க்கும் மற்ற மாநிலங்கள்.. புது உச்சம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரம் என்பது இதுவரை இல்லாத அளவுக்குக் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் மின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மின் உற்பத்தியை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் தமிழ்நாடு கவனம் செலுத்தி வருகிறது.

 Tamilnadu creates new record in solar power generation

ஒரு காலத்தில் மின் பற்றாக்குறை கொண்ட மாநிலமாக இருந்த தமிழ்நாடு, தொடர்ந்து எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் இப்போது மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது.

சோலார் மின்சாரம்: இதற்கிடையே சூரிய ஒளி மின்சார உற்பத்தியில் தமிழ்நாடு இப்போது புதிய சாதனையைப் படைத்துள்ளது. தமிழ்நாட்டில் வெப்பம் உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்னவோ உண்மைதான்.. இருப்பினும், இந்த அதீத வெப்பம் காரணமாகத் தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது இப்போது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி தமிழ்நாட்டில் அதிகபட்சமாகச் சூரிய மின்சாரம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 4866 மெகாவாட்டாக ஆக அதிகரித்துள்ளது. இந்தாண்டு சூரிய ஒளி மூலம் மின்சார உற்பத்தி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் தமிழ்நாடு கவனம் செலுத்தி வரும் நிலையில், சோலார் மின்சார உற்பத்தி என்பது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

புதிய உச்சம்: இந்தச் சூழலில் தான் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி மின்சார உற்பத்தி என்பது 4,882 மெகாவாட் என்ற புதிய சாதனையை எட்டியுள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி 4,866 மெகாவாட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது அதை முறியடித்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதேபோல கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி தமிழ்நாட்டில் சோலர் மின்சார நுகர்வும் 36.10 மில்லியன் யூனிட்டாக அதிகரித்திருந்தது. இது இந்த ஆண்டு இதுவரை இல்லாத அதிகபட்சமாகும்.

கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி மாநிலத்தின் அதிகபட்ச மின் தேவையும் 16,744 மெகாவாட்டாக உச்சம் தொட்டிருந்தது. தமிழ்நாட்டில் இப்போது தினசரி நுகர்வு 355.050 மில்லியன் யூனிட்டாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவும் வரும் காலத்தில் நிச்சயம் அதிகரிக்கவே செய்யும் என்ற சூழலில் அனல் மின் நிலையம் போன்ற அதிக மாசை ஏற்படுத்தும் மின்சாரத்தைத் தவிர்த்து சோலார் மின்சாரம், காற்றாலை மூலம் மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தியில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

 Tamilnadu creates new record in solar power generation

மின் உற்பத்தி: தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் காற்றாலை மின்சார உற்பத்தியில் நாம் முன்னணியில் இருக்கிறோம். நாட்டிலேயே குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் தான் அதிகபட்சமாகக் காற்றாலை மூலம் அதிகபட்ச மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனிடையே சோலார் மின் உற்பத்தியையும் அதிகரிக்க நாம் இப்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வீடுகளின் மாடியில் சோலர் பேனல்களை அமைக்கவும் உதவித் தொகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுபோல தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த நிலையில் சோலார் மின்சார உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது வரை தமிழ்நாட்டில் மொத்தம் 6,750.62 மெகாவாட் உற்பத்தி செய்யும் அளவுக்கு சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன.. தொடர்ந்து அதிகரிக்கும் மின்சார விலையில் இருந்து தப்பிக்கப் பல பெரு நிறுவனங்கள் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யவே விரும்புகின்றனர்.

தென் மாநிலங்களைப் பொறுத்தவரை இப்போது தமிழ்நாட்டில் தான் மின் உற்பத்தி உச்சத்தில் இருக்கிறது.. கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மின் பயன்பாடு 19,387 மெகாவாட் என்ற புதிய உச்சத்தைப் பதிவு செய்தது.. அந்த நாளில் மட்டும் தமிழ்நாட்டில் 423.785 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+