தமிழகத்தில் இன்று 1523 பேருக்கு கொரோனா.. கோவை உட்பட இந்த 3 மாவட்டங்களில் மட்டுமே 100+ பாதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு சதத்தைக் கடந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் முதலில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது செப். 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 1,50,948 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 79 சிறார்கள் உட்பட மொத்தம் 1,523 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 26,13,360 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாசிட்டிவ் விகிதம்
தமிழகத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1 என்ற விகிதத்திலேயே இருந்து வருகிறது. அதிகபட்சமாகக் கோவை மாவட்டத்தில் பாசிட்டிவ் விகிதம் 2.1ஆக உள்ளது. அதைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் 1.7, திருவாரூர் மாவட்டத்தில் 1.6ஆகவும் பாசிட்டிவ் விகிதம் உள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 0.9ஆக உள்ள நிலையில், தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 0.8ஆகவே உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் சிகிச்சை பலனிற்றி 21 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 14 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 7 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இன்று உயிரிழந்தவர்களில் 4 பேர் எவ்வித இணை நோய்களையும் கொண்டிருக்காதவர்கள், 5 பேர் 50 வயதுக்குக் குறைவானவர்கள் ஆகும். மாவட்ட வாரியாக பார்க்கும்போது அதிகபட்சமாகக் கோவையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக இதுவரை 34,899 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 17,322ஆக இருந்த நிலையில் இன்று அது 17,085ஆகக் குறைந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,739 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், ஒட்டுமொத்தமாக இதுவரை 25,61,376 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட ரீதியான பாதிப்பில் தொடர்ந்து கோவை மாவட்டத்திலேயே தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்தில் 188 பேருக்கும் சென்னையில் 183 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 2 மாவட்டங்களைத் தவிர ஈரோடு மாவட்டத்தில் (129) மட்டும் தினசரி பாதிப்பு 100ஐ கடந்துள்ளது
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications