தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு பிறகு குறைந்த தினசரி வைரஸ் பாதிப்பு.. 26 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1957 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் மாநிலத்தில் 28 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், தலைநகர் சென்னையில் நேற்றுடன் ஒப்பிடுகையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதலே கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து 68 நாட்களாக வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது.
ஆனால், நேற்று வரை கடந்த 4 நாட்களாக வைரஸ் பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் சுதாரித்துக் கொண்டு தமிழ்நாடு அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகள் அறிவித்தது.

தினசரி கொரோனா பாதிப்பு
அதைத் தொடர்ந்து இன்று மாநிலத்தில் மீண்டும் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. நேற்று 1990 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று சற்றே குறைந்து 1957 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஐந்து பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பியவர்கள், 109 பேர் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஆகும். இன்று மாநிலத்தில் 1.45 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு. இதுவரை தமிழ்நாட்டில் 25,63,544 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
இன்று தமிழ்நாட்டில் மொத்தம் 28 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அவர்களில் 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 23 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களாகும். மேலும் இன்று உயிரிழந்தவர்களில் 6 பேர் 50 வயதுக்குக் குறைவானவர்கள் மற்றும் 7 பேர் எவ்வித இன்று தமிழ்நாட்டில் மொத்தம் 28 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அவர்களில் 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 23 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களாகும். மேலும் இன்று உயிரிழந்தவர்களில் 6 பேர் 50 வயதுக்குக் குறைவானவர்கள் மற்றும் 7 பேர் எவ்வித இணை நோயும் இல்லாதவர்கள். தமிழ்நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 34,130 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.இணை நோயும் இல்லாதவர்கள். தமிழ்நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 34,130 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
தமிழ்நாட்டில் நேற்று 20,524ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள் இன்று 20,385ஆகக் குறைந்துள்ளது. அதேபோல இன்று மட்டும் 2,068 கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 25,09,029 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டத்தில்பாசிட்டிவ் விகிதம் 3.2% ஆக உள்ளது. அதேபோல அரியலூர் (2.2%), கோவை (2.1%), ஈரோடு (2.1%) மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 2% மேல் உள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.3% ஆக உள்ளது.

மாவட்ட ரீதியாக வைரஸ் பாதிப்பு
மாவட்ட வாரியனா பாதிப்பில் கோவை தான் டாப்பில் உள்ளது. நேற்று கோவையில் 210 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 219 பேருக்கு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தலைநகர் சென்னை(189), ஈரோடு (168), செங்கல்பட்டு (127), தஞ்சை (123) ஆகிய மாவட்டங்களில் மட்டும் வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் உள்ளது.

14 மாவட்டங்களில் உயரும் கொரோனா
நேற்றைய வைரஸ் பாதிப்புடன் ஒப்பிடுகையில் இன்று 14 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா உயிரிழப்புகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாகத் திருப்பூரில் 5 பேரும், சேலத்தில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் கோவை, ஈரோடு உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று ஒருவர் கூட கொரோனாவால் உயிரிழக்கவில்லை.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications