'ஷாக்..'தமிழகத்தில் மீண்டும் 17,000ஐ கடந்த ஆக்டிவ் கேஸ்கள்..இந்த 5 மாவட்டங்களில் நிலைமை சற்று மோசம்
சென்னை: தமிழ்நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், இன்றைய தினசரி கொரோனா பாதிப்பும் 1682ஆகப் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை உச்சம் தொட்டது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு 30 ஆயிரம் வரைகூட சென்றது. மாநிலத்திலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பத் தொடங்கின.
இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கிற்குப் பின்னரே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு மெல்லக் கட்டுக்குள் வரத் தொடங்கியது. தற்போது தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் கொரோனா ஊரடங்கு வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,51,802 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் மொத்தம் 1,682 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 90 பேர் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஆகும். தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 26,50,370 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.1 என்றே நீட்டிக்கிறது. அதிகபட்சமாகக் கோவையில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 2.0% ஆக உள்ளது. மற்ற எந்த மாவட்டத்திலும் பாசிட்டிவ் விகிதம் 2ஐ தாண்டவில்லை. அதேபோல தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் மாநில சராசரியைவிடக் குறைவாக 1%ஆகத் தொடர்கிறது.

கொரோனா உயிரிழப்புகள்
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 15 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். இன்று உயிரிழந்தவர்களில் ஒருவர் எவ்வித இணை நோயும் இல்லாத ஒருவரும் 50 வயதுக்குக் குறைவான 4 பேரும் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகச் செங்கல்பட்டு, சென்னை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
கொரோனாவால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை மீண்டும் தற்போது 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று மாநிலத்தில் 16,993ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள், இன்று 17,027ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1,627 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், இதுவரை தமிழ்நாட்டில் 25,97,943 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட வரியான கொரோனா பாதிப்பில் இன்று கோவையில் தான் மோசமாக உள்ளது. கோவையில் இன்று மொத்தம் 235 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் 194 பேருக்கும் செங்கல்பட்டில் 110 பேருக்கும் ஈரோட்டில் 130 பேருக்கும் திருப்பூரில் 101 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 5 மாவட்டங்களில் மட்டுமே இன்று வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.












Click it and Unblock the Notifications