குட் நியூஸ்..! ஒரு மாதமாக தொடர்ந்து குறையும் கொரோனா.. இந்த 12 மாவட்டங்களில் 100 கீழ் வைரஸ் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 31ஆவது நாளாக இன்றும் குறைந்துள்ள நிலையில், இன்று மாநிலத்தில் 7427 பேருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களும் 61 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதலே கொரோனா 2ஆம் அலை ஏற்படத் தொடங்கியது. அதிலும் கடந்த மே மாதம் 2ஆம் அலை உச்சத்தைத் தொட்டிருந்தது.

இதையடுத்து கொரோனா பரல் கட்டுக்கடங்காமல் செல்வதைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னரே தமிழ்நாட்டில் வைரஸ் பாதிப்பு மெல்லக் குறையத் தொடங்கியது.

தினசரி கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனா பாதிப்பு

சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜூன் 18ஆம் தேதி மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்குக் கீழ் சென்றது. தொடர்ந்து இன்றும் மாநிலத்தில் 31ஆவது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று மாநிலத்தில் 1,70,923 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய மூவர் உட்பட 7427 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் 24,29,924 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்பு

கொரோனா உயிரிழப்பு

அதேபோல இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 276 பேர் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களாகும். கொரோனா உயிரிழப்பும் 3ஆம் நாளாக இன்றும் 200க்கு கீழ் பதிவாகியுள்ளது. இன்று மாநிலத்தில் 189 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அவர்களில் 107 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 82 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். இன்று உயிரிழந்தவர்களில் 38 பேர் இணை நோய் இல்லாதவர்கள், 34 பேர் 50 வயதுக்குட்பட்டவர்கள். தமிழ்நாட்டில் இன்று வரை 31,386 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

அதேபோல ஆக்டிவ் கேஸ்களும் மாநிலத்தில் தொடர்ந்து குறைகிறது. கடந்த வாரம் ஒரு லட்சமாக இருந்த ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது 61,329 பேர் மட்டுமே கொரோனா பாதிப்பு காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் சிகிச்சை பெற்றுவந்த 15,281 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது வரை 23,37,209 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கோவை & ஈரோடு

கோவை & ஈரோடு

கடந்த வாரம் வரை கோவை மற்றும் ஈரோட்டில் தினசரி பாதிப்பை 1000க்கும் மேலாக இருந்த நிலையில், தற்போது எல்லா மாவட்டங்களிலும் தினசரி பாதிப்பு ஆயிரத்திற்குக் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகக் கோவையில் 891 பேருக்கும் ஈரோட்டில் 795 பேருக்கும் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல சேலத்தில் 511 பேருக்கும் திருப்பூரில் 458 பேருக்கும் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

12 மாவட்டங்கள்

12 மாவட்டங்கள்

தலைநகர் சென்னை 4ஆம் நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது. இன்று சென்னையில் 439 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரியலூர், திண்டுக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், தூத்துக்குடி, நெல்லை, வேலூர் ஆகிய 12 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100க்கும் கீழாகக் குறைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+