கொங்கு முதல் சென்னை வரை.. மண்டல வாரியாக அதிமுகவிற்கு பெரிய "அடி".. ஏபிபி - சி வோட்டர் சர்வே முடிவு!
சென்னை; தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக மண்டல வாரியாக பெரிய பின்னடைவை சந்திக்கும் என்று ஏபிபி - சி வோட்டர் சர்வேவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று ஏபிபி - சி வோட்டர் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை அதிமுக இழக்கிறது.
ஏபிபி - சி வோட்டர் சர்வேவின் படி தமிழகத்தில் திமுக 160-172 இடங்களை வெல்லும். அதிமுக 58-70 இடங்களை பெறும். அமமுக- 0-2 இடங்களை பெறும். மநீம- 0-2 இடங்களை பெறும். இதர 0-3 இடங்களை பெறும்.

மண்டலம்
இதில் மண்டல வாரியாக அதிமுக பெரிய பின்னடைவை சந்திக்கிறது. முக்கியமாக கொங்கு, சென்னை, டெல்டா மாவட்டங்களில் திமுகதான் அதிமுகவை விட அதிக இடங்கள் பெறுகிறது. வடதமிழ்கத்திலும் திமுகதான் அதிக இடங்களை வெல்கிறது.

அதிமுக
மண்டல வாரியாக அதிமுக வெற்றிபெற வாய்ப்புள்ள இடங்கள்
டெல்டா மண்டலம் - 7முதல் 9தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றுகிறது
சென்னை மண்டலம் 3முதல் 5 தொகுதிகள்

கொங்கு
கொங்கு மண்டலத்தில் அதிமுக - 17-19 தொகுதிகள் வெல்லும்
வட தமிழகம் 8-10 தொகுதிகள்
தென் தமிழகம் 21-23 தொகுதிகள்
புதுச்சேரியை ஒட்டியுள்ள மண்டலம் 2-4 தொகுதிகளை அதிமுக கூட்டணி வெல்லும்

திமுக
- மண்டல வாரியாக அதிமுக வெற்றிபெற வாய்ப்புள்ள இடங்கள்
- டெல்டா மண்டலம் 32 முதல் 34 தொகுதிகள்
- சென்னை மண்டலம் 11-13 தொகுதிகள்

திமுக கொங்கு
- கொங்கு மண்டலத்தில் திமுக 33-35 தொகுதிகள் வெல்லும்
- வட தமிழகம் 36-38 தொகுதிகள்,
- தென் தமிழகம் 33-35 தொகுதிகள்
புதுச்சேரி ஒட்டியுள்ள மண்டலம் 15-17 தொகுதிகளை திமுக வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications