மிரட்டல்.. பள்ளிக்கு உள்ளே சிறைபிடிக்க முயற்சி.. கலெக்டரிடம் புகார் தந்த சிவசேனாதிபதி.. பரபர பேட்டி
சென்னை: தன்னை தொண்டாமுத்தூர் பள்ளிக்கு உள்ளேயே வைத்து அதிமுகவினர் சிறைபிடிக்க முயன்றதாக திமுக வேட்பாளர் சிவசேனாதிபதி குற்றஞ்சாட்டி உள்ளார்.
Recommended Video
தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக அமைச்சர் வேலுமணியை எதிர்த்து திமுக சார்பாக கார்த்திகேய சிவசேனாதிபதி போட்டியிடுகிறார். இந்த நிலையில் இன்று வாக்குபதிவின் போது சிவசேனாதிபதி அதிமுகவினரால் தாக்கப்பட்டதாக புகார் வைக்கப்பட்டுள்ளது.
செல்வபுரம் பள்ளியில் உள்ள வாக்குசாவடியை பார்வையிடும் போது அங்கு கார்த்திகேய சிவசேனாதிபதி காரை மறைத்து அதிமுக - பாஜகவினர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இந்த தாக்குதலை எதிர்த்து தொண்டாமுத்தூர் பகுதியில் திமுகவினர் போராடி வருகிறார்கள்.

பேட்டி
இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து சிவசேனாதிபதி பேட்டி அளித்தார்.அதில், கோவையில் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். முக்கியமாக பெண்கள், முதியவர்கள் ஆர்வமாக வாக்களிக்கிறார்; மக்கள் கூட்டம் கூட்டமாக வருவது மாற்றத்திற்கான அறிகுறியாக தெரிகிறது.

தோல்வி
அதிமுகவின் தோல்வி உறுதியாகிவிட்டது. இதனால் அவர்கள் வன்முறையில் இறங்கி உள்ளனர். என்னை செல்வபுரம் பள்ளியில் வைத்து சிறைபிடிக்க முயன்றனர். திமுகவின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல், என் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். எனக்கு போலீசாருக்கு முன்பாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

எனக்கு கொலை
கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொண்டாமுத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார். அங்கிருக்கும் போலீசாரும் அதிமுகவினரை தட்டிக்கேட்காமல் அமைதி காத்தனர். அதிமுகவினரை அராஜகத்தை தேர்தல் அலுவலர் தட்டிக்கேட்கவில்லை.

கலெக்டர்
இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்துள்ளேன். அராஜகத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீதும், இதில் நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீதும் புகார் அளித்துள்ளேன் என்று கார்த்திகேய சிவசேனாதிபதி கூறியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications