மின்வாரியத்தில் ஆள்சேர்ப்பு அறிவிப்பாணை ரத்து.. கட்டணமும் திருப்பி அளிப்பதாக அறிவிப்பு.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக மின்வாரியத்தில் இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர் உள்பட 5,318 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணைகள் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. இதற்காக தேர்வு நடத்தி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசு தெரிவித்தது.

Tamilnadu Electricity Board cancels its notification to fill 5318 posts

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த தேர்வுகள் கொரோனா, சட்டசபை தேர்தல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த தேர்வுகள் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஏற்கெனவே ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது. கணினி வழித் தேர்வு ரத்து செய்யப்பட்டு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும். ஏற்கெனவே ஒரு முறை இந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+