“குட் நியூஸ்”.. தீபாவளியை முன்னிட்டு செவ்வாய் அன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை
சென்னை: தீபாவளியை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு 25 ஆம் தேதி செவ்வாய் கிழமை விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்தியா உட்பட உலகம் முழுவதும் வாழும் இந்து மக்களால் அக்டோபர் 24 ஆம் தேதியான இன்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கு மக்கள் இப்போதே தயாராகிவிட்டனர்.
சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் புத்தாடைகள், பட்டாசுகள், தீபாவளி பண்டிக்கைக்கு தேவையான உணவு, பூஜை பொருட்களை வாங்குவதற்காக கடைகள், வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

படையெடுக்கும் மக்கள்
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தலைநகர் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு ஏராளமான மக்கள் படையெடுத்து உள்ளனர். நேற்றும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

விடுமுறை
ஏற்கனவே வார விடுமுறை நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமையை தொடர்ந்து திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை ஒட்டி விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரம் செவ்வாய் கிழமையும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஏதுவாக புதுச்சேரி மாநிலத்தைப் போல தமிழகத்திலும் தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்படுவது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து முடிவெடுத்து அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

செவ்வாய் விடுமுறை
இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இவ்வாண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டு உள்ளது.

சனிக்கிழமை பள்ளி
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது." என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், தீபாவளி அன்றே சொந்த ஊரில் இருந்து கிளம்பும் சிரமத்தை தவிர்ப்பதுடன் போக்குவரத்து நெரிசலும் ஓரளவு குறையும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications