இந்த 4 வழித்தடங்களில் பயணிகள் ரயிலை இயக்குங்கள்.. தென்னக ரயில்வேவிற்கு தமிழக அரசு கோரிக்கை!
சென்னை: தமிழகத்தில் 4 வழித்தடங்களில் பயணிகள் ரயிலை இயக்க தெற்கு ரயில்வேயிற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்து இருக்கிறது. இதனால் தமிழகத்தில் விரைவில் ரயில்கள் இயங்க வாய்ப்புள்ளது.
நாடு முழுக்க குறைந்த அளவிலான பயணிகள் ரயிலுக்கான முன் பதவி தொடங்கி உள்ளது. மார்ச் 25ம் தெத்து ரயில் சேவை நிறுத்தப்பட்ட பின் கடந்த சில தினங்களுக்கு முன் வெளிமாநில தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில் தொடங்கப்பட்டது.

அதை தொடர்ந்து நாடு முழுக்க சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சாதாரண ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதற்கான முன்பதிவும் தொடங்கப்படவில்லை.
அதன்பின் வரும் ஜூன் 1ல் இருந்து மீண்டும் ரயில் சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சில மார்க்கங்களில் மட்டும் ரயில்கள் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு துவங்கி உள்ளது. முக்கியமாக 'துரந்தோ, சம்பர்க் கிராந்தி, ஜன் சதாப்தி, பூர்வா' ஆகிய ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் ரயில்கள் இப்போது துவங்க வாய்ப்பில்லை. தமிழக அரசு ரயில்வே பயணத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 4 வழித்தடங்களில் பயணிகள் ரயிலை இயக்க தெற்கு ரயில்வேயிற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்து இருக்கிறது.
தமிழகத்திற்கு ஏசி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி, கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
ஆனால் சென்னை தொடர்பாக எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் விரைவில் ரயில்கள் இயங்க வாய்ப்புள்ளது. நாளை இது தொடர்பாக அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications