11 நகராட்சிகளின் ஆணையர்கள் திடீர் இடமாற்றம்.. தமிழ்நாடு அரசு முடிவு.. என்ன காரணம்?
சென்னை : தமிழ்நாடு முழுவதும் உள்ள 11 நகராட்சிகளின் ஆணையர்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காக இந்த மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு நகராட்சி ஆணையர்கள் பணி விதிகள் விதி 7 மற்றும் தமிழ்நாடு நகராட்சி ஆணையர்கள் கீழ்நிலைப் பணி விதிகள் விதி 9 ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்படுகின்றனர்.
மேலும் 11 நகராட்சிகளின் ஆணையர்களின் இடமாற்றங்கள் மற்றும் பணியிடங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தமிழக அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

இடமாற்றம் குறித்த விவரங்கள்:
1. கரூர் நகராட்சி ஆணையராக இருந்த எஸ்.ராமமூர்த்தி, கோவையில் என்.விஸ்வநாதனுக்கு பதிலாக பதிலாக, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2. பல்லாவரம் நகராட்சி ஆணையராக இருந்த எம்.காந்திராஜ் உதகமண்டலம் நகராட்சியில் டிஎம்டி.ஆர்.சரஸ்வதிக்கு பதிலாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
3. காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக இருந்த எஸ்.லட்சுமி மறைமலை நகராட்சி ஆணையராக இருந்த ஓ.ராஜாராமுக்கு பதிலாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
4. கோவில்பட்டி, ராமநாதரபுரம், உடுமலைப்பேட்டை ஆணையர்கள் மாற்றம்
5. மறைமலைநகர் நகராட்சி ஆணையராக இருந்த ஓ.ராஜாராம் கோவில்பட்டி பி.கிருஷ்ணமூர்த்திக்கு பதிலாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
6. ராமநாதபுரம் நகராட்சியில் இருந்த காலிப்பணியிடத்திற்கு ஆர்.சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
7. திருப்பத்தூர் நகராட்சி ஆணையராக இருந்த பி.ஏகராஜ் ராணிப்பேட்டை பேரூராட்சியில் கே.ஜெயராமராஜாவுக்கு பதிலாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
8. வாணியம்பாடி நகராட்சி ஆணையராக இருந்த பி.சத்தியநாதன் உடுமலைப்பேட்டை பேரூராட்சியில் இருந்த காலிப்பணியிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
9. ராணிப்பேட்டை நகராட்சி ஆணையராக இருந்த கே.ஜெயராமராஜா திருப்பத்தூர் நகராட்சியில் பி.ஏகராஜூக்கு பதிலாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
10. எடப்பாடி நகராட்சி ஆணையராக இருந்த இ.திருநாவுக்கரசு குடியாத்தம் பேரூராட்சியில் தற்போது காலியாக உள்ள இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
11. திருத்தங்கல் நகராட்சி ஆணையராக இருந்த ஆர்.ரவிச்சந்திரன் கடையநல்லூர் பேரூராட்சியில் காலியாக உள்ள பணியிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
12. காங்கேயம் நகராட்சி ஆணையராக இருந்த எம்.முத்துக்குமார் திருத்துறைப்பூண்டி பேரூராட்சியில் காலியாக இருந்த பணியிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications