விஜயகாந்துக்காக ஓடி வந்த தமிழக அரசு .. பிரேமலதாவுக்கு தந்த நம்பிக்கை.. என்ன தெரியுமா?
சென்னை: தேமுதிக விஜயகாந்துக்கு எந்த மருந்துகள் தேவை என்றாலும் தமிழக அரசு சார்பில் வழங்குமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 18ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் சளி, காய்ச்சல், இருமல் பிரச்சினைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து கடந்த 23 ஆம் தேதி மியாட் அறிக்கை வெளியிட்டிருந்தது.

அதில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், சிகிச்சைக்கு அவர் நன்றாக ஒத்துழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மருந்துகள் அனைத்தையும் அவர் உடல்நிலை ஏற்று கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, விஜயகாந்த் சுயநினைவோடு இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில்தான் அவருக்கு அங்கு கிட்டத்தட்ட10 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியானது. அதில் விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை.
அவருக்கு 14 நாட்கள் சிகிச்சை தேவைப்படுகிறது. நுரையீரல் பிரச்சினைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் உடல்நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வாயிலாக தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தமிழக அரசு சார்பில் விசாரிக்கப்பட்டதாகவும் மனைவி பிரேமலதாவிடம் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது அரசு தரப்பிலிருந்து என்ன உதவிகள் தேவை என்றாலும் தயங்காமல் கேட்டுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

அது மட்டுமல்லாமல் நுரையீரல் பிரச்சினை உள்ளதால் விஜயகாந்துக்கு எந்த மருந்துகள் தேவைப்பட்டாலும் அரசு தரப்பிலிருந்து வழங்குமாறும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். மேலும் அவருடைய உடல்நிலையை கவனித்துக் கொள்ளும் மருத்துவர்களும் மருத்துவ நிர்வாகமும் தொடர்ந்து விஜயகாந்த் உடல்நிலை குறித்தும் சிகிச்சை குறித்தும் அரசுக்கு அப்டேட் கொடுத்து வருகிறார்களாம்.
விஜயகாந்த் மீது முதல்வர் ஸ்டாலினுக்கு அதிக பாசம் உள்ளது. ஒரு முறை உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்தை ஸ்டாலின் நேரில் போய் சந்தித்து நலம் விசாரித்தார். அது போல் விஜயகாந்த் கட்சியிலிருந்து யாரையும் திமுகவில் அழைத்து வந்து அவருக்கு மேலும் மனஉளைச்சலை கொடுக்கக் கூடாது என்றும் திமுக கட்சி நிர்வாகிகளுக்கு தலைமை அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா












Click it and Unblock the Notifications