இனி தமிழில்தான் இனிஷியல் போட வேண்டும்.. பள்ளி கல்லூரிகளுக்கு பறந்த அரசின் உத்தரவு.. முழு விபரம்!
சென்னை: பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் பெயர்களை ஆவணங்களில் எழுதும் போது தமிழில்தான் எழுத வேண்டும். அதேபோல் இனிஷியல் எனப்படும் முதல் எழுத்தையும் தமிழில்தான் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும் இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திலும் பெயர்களை எழுதும் போது தமிழிலேயே எழுத வேண்டும் என்று முன்பில் இருந்தே அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் வெளியிடப்பட்டது.
இதையடுத்து தமிழ் வளர்ச்சி இயக்குனரகம் சார்பாக தமிழில் பெயர்களை எழுதுவது தொடர்பான அறிவுறுத்தல் சமீபத்தில் தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டது. அதில் பல்வேறு பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டது.

பரிந்துரை
தமிழ் வளர்ச்சி இயக்குனரகம் சார்பாக செய்யப்பட்ட பரிந்துரையில், அரசு அலுவலகங்கள் தங்கள் பெயர்களை தமிழில் எழுத வேண்டும். இதற்கான சட்டம் ஏற்கனவே இருக்கிறது. தமிழ்நாடு ஆட்சி மொழி சட்டத்தின் ஒரு விதியாக இது உள்ள போதிலும் பல அரசு அலுவலர்கள் இதை கடைபிடிப்பது இல்லை. அதேபோல் பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்களின் பெயர்களின் முன்னெழுத்துக்கள் தமிழில் எழுதப்படுவது இல்லை.

அவசியம்
அரசு அலுவலகங்களில் அரசு அலுவலா்கள், பணியாளா்கள் அனைவரும் தமிழிலேயே கையெழுத்திட வேண்டுமென அரசாணை உள்ளது. இதை உடனே அலுவலகங்களில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். முதல்வர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை இதை பின்பற்ற வேண்டும் என்று தமிழ் வளர்ச்சி இயக்குனரகம் சார்பாக செய்யப்பட்ட பரிந்துரையில் குறிப்பிடப்பட்டது.

ஏற்பு
இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு அரசு தனது அறிவுறுத்தலை அனுப்பி உள்ளது. அதன்படி, பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் பெயர்களை ஆவணங்களில் எழுதும் போது தமிழில்தான் எழுத வேண்டும். அதேபோல் இனிஷியல் எனப்படும் முதல் எழுத்தையும் தமிழில்தான் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆவணங்கள் அனைத்திலும் தமிழ் இனிஷியல் மற்றும் முழு பெயர் தமிழிலேயே இருக்க வேண்டும்.

அரசு அலுவலர்
இதை நடைமுறையாக கொண்டு வர வேண்டும். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள், அரசு அலுவலர்கள் தங்கள் பெயர்களை தமிழிலேயே பயன்படுத்த வேண்டும். ஆவணங்களில் தமிழிலேயே பெயர்களை எழுத வேண்டும் என்று தற்போது தமிழ்நாடு அரசு மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளா் மகேசன் காசிராஜன் மூலம் இந்த அறிவிப்பு அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மக்கள்
இது போக தனியாக பொது மக்களுக்கும் தமிழ் மொழி பயன்பாடு தொடர்பான அறிவுறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் தமிழிலேயே தங்கள் பெயர்களை எழுத பழக வேண்டும். இதை வழக்கமாக அவர்கள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications