கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்! டிஸ்மிஸ் செய்ய உத்தரவு? உண்மையில் தமிழக அரசு உத்தரவு என்ன
சென்னை: கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் இரண்டாவது நாளாகத் தொடரும் நிலையில், இது தொடர்பாகத் தமிழக அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்து உள்ளது.
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருபவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலில் இந்தப் போராட்டத்தில் அரசு முக்கிய உத்தரவைப் பிறப்பித்து உள்ளதாகத் தகவல் பரவியது. இது போராடும் விரிவுரையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போராட்டம்
இன்று இரண்டாவது நாளாகப் போராட்டம் நடைபெறும் நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் போராடும் கவுரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்யக் கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டதாகத் தகவல் பரவியது. மேலும், போராட்டம் நடத்துவோருக்கு மாற்றாக உரியத் தகுதியுடன் கூடிய கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியானது.

பரவிய தகவல்
மேலும், கவுரவ விரிவுரையாளர்களைப் போராட்டத்தைக் கைவிடக் கல்லூரி முதல்வர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் போராட்டத்தைக் கைவிடாத கவுரவ விரிவுரையாளர்களை பணியில் இருந்து உடனே நீக்க வேண்டும் என்றும் தகவல் வெளியானது. மேலும், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுரவ விரிவுரையாளர்கள் மீண்டும் பணி நியமனம் கோரி வந்தால் சேர்க்கக் கூடாது என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது.

மறுப்பு
இந்நிலையில், இந்தத் தகவலுக்குத் தமிழக அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக உயர் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டால், அவர்களைப் பணிநீக்கம் செய்யுமாறு கல்லூரிக் கல்வி இயக்குநரால் ஆணையிடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுகிறது. தமிழக அரசின் நோக்கம் தற்போது பணிபுரிந்துவரும் கவுர விரிவுரையாளர்களை நீக்குவது அல்ல.

சலுகை மதிப்பேன்
இதுவரை இல்லாத வகையில், முதல்வர் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சரின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஆணைகளுக்கு இணங்க, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4000 உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் கவுரவ விரிவுரையாளர்களும் கலந்துகொள்ளலாம். அவர்களுக்கு நேர்காணலில் மொத்தமுள்ள 30 மதிப்பெண்களில் 15 மதிப்பெண்கள் சலுகை மதிப்பெண்களாக வழங்கப்படவுள்ளது.

ஒத்துழைப்பு தேவை
இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளன. கவுரவ விரிவுரையாளர்கள் இந்தத் தேர்வுகளில் பங்கேற்று பணிவாய்ப்பு பெற்றுப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அரசுக் கல்லூரிகளில் ஒரு சில கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிய வருகிறது. அவர்களும் போராட்டத்தைக் கைவிட்டு அரசின் முடிவிற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications