தொடர்ந்து குறையும் பாதிப்பு.. தமிழ்நாட்டில் இன்று 1,573 பேருக்கு கொரோனா.. 27 பேர் பலி
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31445 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அங்கு தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து சரிந்து வருகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தமிழ்நாட்டில் 1600க்கும் குறைவாக கேஸ்கள் பதிவாகி உள்ளது.
தமிழ்நாட்டில் லாக்டவுன் தளர்வுகள் பெரிய அளவில் அமல்படுத்தப்பட்ட பின்பும் கூட கொரோனா கேஸ்கள் சரிந்தபடியே உள்ளது. செப்டம்பர் மாதம் மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மூன்றாம் அலைக்கான அறிகுறி இதுவரை ஏற்படவில்லை.

இன்றைய கேஸ்கள்
இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 27 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 34,788 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

சென்னை
சென்னையில் இன்று 170 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 2002 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.
கோவையில் 181 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 2132 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.
ஈரோட்டில் 130 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 1616 பேர் ஈரோட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

குணம்
தமிழ்நாட்டில் இன்று 1,797 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 26,05,647 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 18,352 ஆக சரிந்து உள்ளது.

கொரோனா
தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 26,04,074 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,56,985 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,56,386 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 4,04,78,188 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications