4 நாட்கள் மட்டுமே சட்டமன்ற கூட்டத்தொடர்... ஜன.9-ம் தேதியுடன் கூட்டத்தொடர் நிறைவு
சென்னை: தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரை வரும் 9-ம் தேதி வரை நடத்த சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் உரையுடன் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், வெறும் நான்கு நாட்கள் மட்டுமே நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நாளை நிறைவேற்றப்பட உள்ளது.

அலுவல் ஆய்வு
இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் பான்வாரி லால் புரோகித் உரையுடன் இன்று காலை தொடங்கியது. சுமார் ஒன்றரை மணி நேர ஆளுநர் உரைக்கு பின்பு இன்றைய கூட்டம் முடித்துவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.

ஜனவரி 9 வரை
அதில் வரும் 9-ம் தேதி வரை சட்டமன்றக் கூட்டத்தொடரை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நாளை இரங்கல் தெரிவிக்கும் தீர்மானமும், அதைத்தொடர்ந்து ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் நடைபெறவுள்ளது.

துரைமுருகன்
சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு கொறடா ராஜேந்திரன், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், சட்டசபை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பொங்கல் பண்டிகை
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குறைந்தது 10 நாட்களாவது நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 மட்டுமே நடைபெறுகிறது. இதனிடையே பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் வருவதால் அதற்கு முன்னரே கூட்டம் முடித்து வைக்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications