TN Colleges: தமிழகத்தில் 31 ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை.. பள்ளிகளுக்கும் முக்கிய அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் வரும் 31 ஆம் தேதி வரை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது உயர் கல்வித் துறை. அது போல் பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னை, செங்கலபட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு
நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 13,990 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று காலையுடன் இரவு நேர ஊரடங்கு முடிவடைந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு
வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. வரும் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் கல்லூரிகள், பள்ளிகள் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை அந்தந்த துறைகள் வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 31 ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்பு
இதுகுறித்து உயர்கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், அனைத்து பொறியியல், பாலிடெக்னிக், கலை அறிவியல், முதுகலை கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை
அது போல் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வரும் 31 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலமும் ஆன்லைன் வகுப்பு மூலமும் பாடம் எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு என்பதால் மாணவர்களின் நலன் கருதி 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications