இளைஞரணிக்கு முன்னுரிமை.. அன்பில் மகேஷை சரியான நேரத்தில்.. சரியாக களமிறக்கிய திமுக.. இதுதான் ஸ்டாலின்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற அன்பில் மகேஷுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. திமுகவில் இளைஞரணி துணை செயலாளராக இருக்கும் அன்பில் மகேஷுக்கு அமைச்சரவையில் அதிரடி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் நாளை பொறுப்பேற்க உள்ளார். நாளை ஆளுநர் மாளிகையில் ஆடம்பரம் இல்லாமல் ஸ்டாலின் முதல்வராக பொறுபேற்க உள்ளார்.
இந்த நிலையில் ஸ்டாலினுடன் நாளை பதவி ஏற்க உள்ள 33 அமைச்சர்கள் நாளை பதவி ஏற்க உள்ளனர். இந்த 33 அமைச்சர்களுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பட்டியல்
இதில் இளம் திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாரம்பரியமான அரசியல் குடும்பத்தை சேர்ந்த அன்பில் மகேஷ் இந்த முறை திருவெறும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி 49,697 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் குமாரை தோற்கடித்தார்.

வெற்றி
இந்த நிலையில் தற்போது அன்பில் மகேஷுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் திமுகவின் 100% வெற்றிக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் முக்கிய காரணமாக இருந்தார். இதனால் தற்போது பள்ளிக்கல்வித்துறையை ஸ்டாலின் அன்பிலும் பரிசளித்துள்ளார். இவர் திமுகவின் இளைஞரணி துணை செயலாளர் ஆவார்.

வாய்ப்பு
திருச்சியில், திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), திருவெறும்பூர், முசிறி, துறையூர் மணப்பாறை, திருவரங்கம், லால்குடி, மண்ணச்சநல்லூர், ஆகிய 9 தொகுதிகளிலும் திமுகவே வென்றது குறிப்பிடத்தக்கது. இதில் திமுகவின் இளைஞரணி பங்கு மிக முக்கியமானது. அதிலும் கடந்த சில வருடங்களில் டெல்டா மாவட்டங்களில் திமுகவில் பல இளைஞர்கள் இணைய இவர் காரணமாக இருந்தார்.

காரணம் என்ன
தேர்தல் நேரத்தில் திமுகவின் வெற்றியும் இது பெரிய அளவில் எதிரொலித்து. இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு பக்கபலமாக இருந்து கட்சியை பலப்படுத்துவதில் அன்பில் முக்கிய பங்கு வகித்தார். அதற்கான வெகுமதி இப்போது அவருக்கு கிடைத்துள்ளது. திமுகவின் இளைஞரணி முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஸ்டாலின் முடிவு
அதோடு கொரோனா காலம் என்பதால் மாணவர்கள் ஆன்லைன் பள்ளி, ஆன்லைன் தேர்வு என்று எல்லாம் டிஜிட்டல் ரீதியாக மாறி வருகிறது. பாடங்களும் இதற்கு ஏற்றபடி டிஜிட்டலை மையமாக வைத்து மாற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இளம் எம்எல்ஏவான அன்பில் மகேஷை திமுக தலைவர் ஸ்டாலின் களமிறக்கி உள்ளார்.

இளைஞர்
இளைஞர் என்பதாலும், பள்ளி கல்வியில் புதிய திட்டங்களை, புரட்சியை ஏற்படுத்த கூடிய துடிப்பானவர் என்பதாலும் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளார். திமுக ஆட்சியில் தங்கம் தென்னரசு வசம் இருந்த அமைச்சரவையை ஸ்டாலின் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications