நீட் விலக்கு விவகாரம்.. நாளை அனைத்துக் கட்சி கூட்டம்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: நீட் விலக்கு மசோதா ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், பிப். 5ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தர வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகிறது. நீட் பாதிப்பு குறித்து ஆராய கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏகே ராஜன் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது.

இந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் திமுக அரசு நீட் எதிர்ப்பு மசோதாவைத் தயார் செய்திருந்தது. இந்த மசோதா தமிழக சட்டசபையில் கடந்த செப். 13ஆம் தேதி முழு மனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் அனுப்பப்பட்டது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் ஆகும் நிலையில், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார் நீட் மசோதா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாக இருக்கிறது என்று ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக நாளை (பிப். 5) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications