தென்கொரியாவிலிருந்து சைபர் தாக்குதல்.. ஹேக் செய்யப்பட்ட தமிழக போலீஸின் இணையதளம்! ஷாக்
சென்னை: தென்கொரியாவில் இருந்து சிலர் தமிழக போலீஸ் இணையதளத்தை முடக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 1.5 லட்சம் காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் ஊதியம் தொடர்பான விவரங்கள், எஃப்ஐஆர் பற்றிய தகவல்கள், வழக்கு விசாரணை நிலை, சாலை விபத்து தகவல்கள் போன்ற விவரங்கள் டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இதனை அறிந்துக்கொள்ள கிரைம் மற்றும் கிரிமினல் டிராக்கிங் என்ற பெயரில் (சி.சி.டி.என்.எஸ்.) இணைய தளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தை தென்கொரியாவிலிருந்து சிலர் ஹேக் செய்துள்ளனர்.

இது காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9ம் தேதியன்று இந்த ஹேக்கிங் சம்பவம் நடந்திருக்கிறது. இதனையடுத்து மற்ற டிஜிட்டல் தகவல் சேமிப்பு தளங்களுக்கு அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் அவை பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. சி.சி.டி.என்.எஸ்-ஐ ஹேக் செய்தவர்கள் ரூ.16.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இந்த இணையதளத்தில் பயனர்கள் உள்நுழைய ஓடிபி வசதி இருக்கும் எனவே இதனை ஹேக் செய்வது அவ்வளவு எளிதானது கிடையாது.
இருப்பினும் இரண்டு பலவீனமான பாஸ்வார்ட்களை ஹேக்கர்கள் கண்டுபிடித்து அதன் மூலம் ஹேக்கிங்கில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "ஹேக்கிங் குறித்து உடனடியாக தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனை (ELCOT) அலர்ட் செய்யப்பட்டதால் மற்ற தகவல்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டன. இந்த ஹேக்கிங்கில் யார் ஈடுபட்டது என்பதை கண்டுபிடிக்க விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
9ம் தேதியன்று காலை ஹேக்கிங்கால் முடங்கிய காவல்துறையினர் இணையதளம், அன்று மாலைதான் மீட்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். தென்கொரியாவில் இருந்துதான் இந்த சைபர் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என்பது முதற்கட்டமாக தெரிய வந்துள்ளது. எனவே விரைவில் இதில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து கண்டுபிடித்துவிடுவோம் என்று போலீஸார் கூறியுள்ளனர். ஏற்கெனவே கடந்த 2012ம் ஆண்டு இதேபோல தமிழ்நாடு போலீஸின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications