தொடர் மழை எதிரொலி.. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Subscribe to Oneindia Tamil

சென்னை : தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    அடுத்த 2 நாட்களுக்கு Chennai-ல் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரமாக தீவிர மழை பெய்து வருகிறது. முக்கியமாக கடந்த 48 மணி நேரமாக அதி தீவிர கனமழை பெய்து கொண்டு இருக்கிறது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நவம்பர் 11ம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    அறிவிப்பு

    அறிவிப்பு

    வங்கக்கடலில் தற்போது உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு போக இன்னொரு தாழ்வு பகுதி நாளை அல்லது நாளை மறுநாள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் தீவிர கனமழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மழை

    மழை

    தமிழ்நாட்டில் நேற்று முதல் நாள் மாலையில் இருந்து மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் சென்றுள்ளது. அதேபோல் டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்து வருகிறது.

     தீவிர கனமழை

    தீவிர கனமழை

    மயிலாடுதுறை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரமாக கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    இன்றும் பெய்யும்

    இன்றும் பெய்யும்

    இந்த மாவட்டங்களில் இன்றும் தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது . இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பத்தூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலூர், நாமக்கல், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+