தமிழ்நாட்டில் இன்று 17321 பேருக்கு கொரோனா.. 405 பேர் பலி.. ஒருநாள் டெஸ்டிங்கில் புதிய ரெக்கார்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 17321 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதேபோல் கொரோனா டெஸ்டிங் தமிழகத்தில் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. சென்னை, கோவை என்று அனைத்து மாவட்டங்களிலும் கேஸ்கள் வேகமாக குறைய தொடங்கி உள்ளன.
மோசடி.. மகாத்மா காந்தி கொள்ளுப் பேத்திக்கு 7 வருடம் சிறை.. தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
ஈரோட்டில் மட்டும் கொரோனா கேஸ்கள் கொஞ்சம் அதிகமாக பதிவாகி வருகின்றது. தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் காரணமாக கொரோனா கேஸ்கள் கட்டுக்குள் வந்துள்ளது.
எத்தனை
தமிழ்நாட்டில் இன்று 17321 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 405 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 28170 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.
மாவட்ட நிலவரம்
சென்னையில் இன்று 1345 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 14678 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் 2319 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 24022 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். ஈரோட்டில் 1405 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 13724 பேர் ஈரோட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.
குணம்
தமிழ்நாட்டில் இன்று 31253 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 2059597 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 2004258 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 2292025 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
டெஸ்ட்
கொரோனா டெஸ்டிங்கில் தமிழ்நாடு புதிய உச்சம் தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 180750 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 170332 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 28519161 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.