தமிழகத்தில் 52,276 பேருக்கு கொரோனா சோதனை- 503 பேருக்கு பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று 52,276 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் 503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
தமிழகத்தில் இன்று 52,276 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 1,55,49,828 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இன்றைய சோதனையில் 503 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,36,818 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் 544 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகினர். தமிழகத்தில் இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 8,19,850.
தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 6 பேர் பலியாகினர். தமிழகத்தில் மொத்தம் 12,339 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.
கவலைபடதீங்க... நாங்க கொரோனாவை கட்டுப்படுத்திடோம்... நம்பிக்கை தரும் ஹர்ஷ் வர்தன்
சென்னையில் மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கோவையில் 48; செங்கல்பட்டில் 41 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.