தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட பாதிப்பு- முதல் முறையாக 4,526 பேருக்கு கொரோனா
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டிருக்கிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மொத்தம் 4,526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 7-ந் தேதியன்று அதிகபட்சமாக 4,343 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று அதை விட அதிகமாக ஒரேநாளில் 4,526 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டோர் எண்ணிகை 1,47,324 ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2,099 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று வெகுவாக கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது. சென்னையில் மட்டும் 1078 பேருக்கு கொரோனா உறுதியானது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 4,743 பேர் இன்று வீடு திரும்பினர்.












Click it and Unblock the Notifications