மேலும் 2 மணி நேரம் விற்பனை.. டாஸ்மாக் மதுக் கடை இனி இரவு 7 மணிவரை திறந்திருக்கும்- அரசு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடை விற்பனை நேரம், மேலும் 2 மணி நேரம் நீட்டிக்க படுவதாக அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்து கொள்ள, உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் மறுபடியும் மதுபான கடைகள் இயங்கத் தொடங்கியுள்ளன.

டோக்கன் வழங்கி கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடைமுறை அமலில் உள்ளது. இதனால், வழக்கத்தை விட விற்பனை சற்று குறைய தொடங்கியது. இந்த நிலையில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை என்று இருந்த டாஸ்மாக் மதுபான கடை விற்பனை நேரம் இனிமேல் மாலை 7 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. அதாவது ஒரு நாளைக்கு கூடுதலாக 2 மணி நேரம் மதுபானம் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்ற போதிலும், நீண்ட வரிசையில் குடிமகன்கள் காத்திருந்து மதுபானம் பெறுவதால், நேர நீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications