கோவில் நகைகளை உருக்கி.. அப்படியே பிஸ்கட்டுகளாக மாற்றும் சேகர் பாபு.. அரசின் பெரிய பிளான்.. என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நகைகளை உருக்கி பிஸ்கட்டுகளாக மாற்றும் திட்டத்தில் இருப்பதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்தே சேகர்பாபு பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கோவில்களை புதுப்பிப்பது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, அன்னதானம் திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதோடு கோவில் நிலங்கள் கடந்த 4 மாதங்களில் ஏக்கர் கணக்கில் மீட்கப்பட்டு உள்ளது. பல லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. கோவில் சொத்துக்கள், நிலங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முறையாக இணையத்திலும் பதிவேற்றப்பட்டு வருகிறது. அனைத்து கோவில் சொத்து விவரங்களும் இணையத்தில் ஏற்றப்பட்டுள்ளது.

கோவில் சொத்து
இந்த நிலையில் அடுத்தகட்டமாக கோவில் நகைகளை கவனமாக பாதுகாக்கும் முடிவில் அமைச்சர் சேகர் பாபு இறங்கி இருக்கிறார். கோவில் நகைகளை வைத்து, கோவில்களுக்கு மேலும் வருமானம் ஈட்டும் வழியை அவர் ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்துள்ளார். அதன்படி கோவில் நகைகளை மீட்டு அதை வங்கிகள், வைப்பு நிதிகள் அடிப்படையில் சேமிக்கவும், அதன் மூலம் வருமானம் ஈட்டி, அதை கோவில் பணிகளில் பயன்படுத்தவும் அமைச்சர் சேகர் பாபு முடிவு செய்துள்ளார்.

சேகர் பாபு
இது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு அளித்த பேட்டியில், கோவில் சொத்துக்களை மீட்டு எடுப்பதில் இந்து சமய அறநிலையத்துறை வேகம் காட்டி வருகிறது. கோவில்கள், வழிபாடுகள் தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறோம். கடந்த மானியக்கோரிக்கையின் போது மட்டும் 112 அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறோம். இதில் ஒவ்வொரு அறிவிப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமான 5 அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்துவிட்டது.

கோவில் மொட்டை
முக்கியமாக கோவில்களில் மொட்டை போட கட்டணம் இல்லை போன்ற அறிவிப்புகள் மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மொட்டை அடிக்கும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாத ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் போன்ற அறிவிப்புகள் வரவேற்பை பெற்றுள்ளது. இன்னொரு பக்கம் கோவிலில் இருக்கும் பயன்படுத்தப்படாத நகைகளை முறையான பயன்பாட்டுக்கு கொண்டு வர இருக்கிறோம்.

குழு
மதுரை மண்டலத்துக்கு நீதிபதி ஆர்.மாலா, திருச்சி மண்டலத்துக்கு நீதிபதி ரவிசந்திரபாபு, சென்னை மண்டலத்துக்கு நீதிபதி ராஜீ ஆகியோர் தலைமையில் இதற்காக குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு மூலம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நகைகளை மீட்டு அதை உருக்க போகிறோம். மத்திய அரசின் உருக்காலையில் உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றுவோம்.

வங்கி
இதை அதிக வருமானம் ஈட்டும் வகையில் மாற்றி வைப்பு நிதியாக வைக்க உள்ளோம். இதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் கோவில் திருப்பணிகள் அனைத்தையும் செய்ய உள்ளோம். இதில் கோவில்களின் வருமானத்தை அதிகரிக்க உதவும். இந்த நகைகள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதை முறையாக பயன்படுத்த உள்ளோம். அறநிலையத்துறைக்கு கூடுதல் வருமானம் ஈட்ட இது வழி செய்யும்.

ஆண்டு
இந்த ஆண்டுக்குள் 500 கோவில்களில் திருப்பணிகள் செய்யப்படும். இதற்கான பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. கோவில் கும்பாபிஷேகங்கள் முறையாக நடத்தப்படும். கோவில்கள் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோவில் பணிகளை முறையாக மேற்கொள்ள முடியும். காணாமல் போன சிலைகளை மீட்க முறையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications