வடக்கால துணி காய வச்சிக்கலாம்.. தெற்கால குடைய கைல வச்சிக்கணும்.. சூப்பர் போஸ்ட் போட்ட வெதர்மேன்
சென்னை: சென்னையில் இன்று வெயில் காயும் என்பதால் இன்றே துணிகளை துவைத்து காயவைத்து கொள்ளுங்கள் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவை காரணமாக தமிழகத்தில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி முதல் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இன்று வரை சென்னையில் பல இடங்களில் வெள்ளம் வடியவில்லை. மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அது போல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நீர் நிலைகள் உடைந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
தமிழகம்
இதனால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நவம்பர் 7, 11, 18 ஆகிய 3 நாட்கள் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த 3 நாட்களும் தமிழகத்தில் மழைக்கு தரமான சம்பவங்களாகவே இருந்தன. இந்த நிலையில் இதுவரை உருவான இரு காற்றழுத்த தாழ்வு மண்டலங்களும் புயலாக மாறவில்லை.
காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்த நிலையில் தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது 48 மணி நேரத்தில் தீவிரமடையும் என சொல்லப்படுகிறது. இதனால் நாளை முதல் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாத நிலையில் மேலும் மழையா என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
தென் தமிழகம்
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தென் தமிழகத்தை நோக்கி நகரும் ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், நெல்லை, கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் தெற்கு கேரளா பகுதிகளில் மழை பெய்யும்.
துணி துவைத்து
மற்றபடி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தினர் துணியை துவைத்து காய வைத்துக் கொள்ள இன்று சரியான நாளாகும் என தெரிவித்துள்ளார். அது போல் வரும் 26ஆம் தேதி முதல் சென்னையில் கனமழை பெய்யும் என்பதையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருந்தார்.