புதுவை டூ டெல்டாவுக்கு பாயிண்ட் டூ பாயிண்ட்டாக செல்லும் மழை.. ஆனா சென்னையை விடாது.. வெதர்மேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டிச்சேரி, கடலூர், நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்றும் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Tamilnadu-ல் மழைக்கான அச்சுறுத்தல் இருக்கு - Tamilnadu Weatherman

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் கூறுகையில் பாண்டிச்சேரியிலிருந்து டெல்டா வரை கனமழை பெய்யும். காற்று குவிதல் அந்த பகுதியில் இருப்பதால் கனமழைக்கு வாய்ப்புண்டு.

    சென்னையில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்யும். மேகக் கூட்டங்கள் சென்னையில் சூழ்ந்திருப்பதால் வழக்கம் போது நள்ளிரவு முதல் காலை வரை மழை பெய்யும். தற்போது சென்னையின் தெற்கு பகுதியில் மழை பெய்து வருகிறது.

    கிழக்கு கடற்கரை சாலை

    கிழக்கு கடற்கரை சாலை

    தென் சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, செங்கல்பட்டு பகுதி ஆகியவற்றில் நேற்று மழை பெய்யாத நிலையில் இன்று அப்பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழையை கொடுக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால் நாகை முதல் சென்னை வரை நவம்பர் 10 மற்றும் 11 தேதிகளில் மழ பெய்யும்.

    கடலூர்

    கடலூர்

    இதற்கு இன்னும் இரு தினங்கள் உள்ளன. இவை நடப்பதற்கு முன்னர் இன்று பாண்டிச்சேரி- கடலூர்- நாகை- ராமநாதபுரம் வரை நல்ல கனமழை பெய்யும். அத்துடன் தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு, கேரளாவிலும் காற்றின் திசை மாற்றத்தால் மழை பெய்யும். ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு செம மாஸான நாள் எனலாம். இன்றைய தினம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.

    செய்யூர்

    செய்யூர்

    அதன்படி பெரம்பூரில் 137 மி.மீ. மழையும் செய்யூரில் 132 மி.மீ மழையும், மதுராந்தகத்தில் 126 மி.மீ. மழையும் சோழவரத்தில் 125 மி.மீ. மழையும் தண்டையார்பேட்டையில் 103 மி.மீ. மழையும் அயனாவரத்தில் 94 மி.மீ. மழையும். கும்மிடிப்பூண்டியில் 91 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக காரைக்கால், புதுச்சேரியில் 50 மி.மீ மழை பதிவாகியுள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    சாலைகளில் தண்ணீர்

    சாலைகளில் தண்ணீர்

    சென்னையில் கடந்த இரு தினங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தலைநகர் சென்னையின் பெரும்பாலான இடங்களில் இருளில் மூழ்கியுள்ளன. மேலும் சென்னையில் கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+