Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குட் பை! கேடிசிசி பெல்ட்டுக்கு இது கடைசி மழை.. குறைந்த நேரத்தில் அதிக மழை.. வெதர்மேன் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வலுவிழந்து கடலில் கலந்த காற்றழுத்தத்தின் கடைசி மழை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை காலமான இந்த நவம்பர் மாதத்தில் வங்கக் கடலில் முதல் காற்றழுத்தம் உருவாகி அது புயலாக வலுப்பெறவில்லை. இது நவம்பர் 11, 12, 13 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் நல்ல மழையை கொடுத்தது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்தது. அதிலும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பேய் மழை பெய்தது.

காற்றழுத்தம்

காற்றழுத்தம்

இந்த நிலையில் காற்றழுத்தம் வலுவிழந்து தமிழகத்தின் உள்மாவட்டங்கள் வழியாக அரபிக் கடலில் போய் கலந்தது. எனினும் காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக நேற்று காலை சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மதிய வேளையிலும் லேசான மழை பெய்தது.

சென்னையில் மழை

சென்னையில் மழை

இந்த நிலையில் சென்னையில் காலை முதலே வெயில் எட்டி பார்க்கத் தொடங்கியது. திடீரென ஒரு 12.30 மணிக்கு சென்னையில் மழை பெய்தது. பயங்கர இடி சப்தத்துடன் இந்த மழை பெய்தது. மிக பெரிய சப்தத்தில் இடி இடித்ததால் அச்சம் நிலவியது. சென்னையின் முகப்பேர், அம்பத்தூர், அண்ணாநகர், கோயம்பேடு, அமைந்தகரை, சூளைமேடு, ஊரப்பாக்கம், ஆதனூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சில மணி நேரங்கள் இந்த மழை நீடித்தது.

வெதர்மேன்

வெதர்மேன்

எம் எம் டி ஏ காலனி, நுங்கம்பாக்கம், வடபழனி, அரும்பாக்கம், நெல்சன் மாணிக்கம் சாலை, திருவல்லிக்கேணி, விருகம்பாக்கம், ராயப்பேட்டை, கொளத்தூர், பெரம்பூர், சேத்துபட்டு, கே கே நகர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 9 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்தமாகி பின்னர் காற்றழுத்தாமாக வலுவிழந்தது. இது தற்போது அரபிக் கடல் வழியே சென்றுவிட்டது.

கடைசி மழை

கடைசி மழை

இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு கடைசியாக மழை பெய்கிறது. அதாவது கடந்த காற்றழுத்தத்தின் கடைசி மழை இதுவாகும். இது குறைந்த நேரத்தில் அதி தீவிர மழையை கொடுக்கும். வேறு எங்கும் மழை இல்லை என குறிப்பிட்டுள்ளார். அது போல் நெட்டிசன்கள் கடலூரில் வெயில் இருப்பதாக சொல்கிறார்கள். அது போல் மேடவாக்கத்திலும் வெயில் எட்டி பார்த்துள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+