சென்னை உள்பட வடதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பனி விழும் மலர்வனம்தான்!.. வெதர்மேன் அப்டேட்!
சென்னை: சென்னை உள்பட வடதமிழகத்தில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு பனிப்பொழிவு இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தம் கடந்த 11, 12, 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழையை கொடுத்தது. இது கடந்த 12 ஆம் தேதி வலுவிழந்து குறைந்த காற்றழுத்தமாகவே அரபிக் கடலில் கலந்தது.
நேற்று முன் தினம்வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இன்று காலை வெயில் காய்ந்தது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் பனிபொழிந்து வருகிறது.

புல்வெளிகளில் பனி
நேற்று காலை புல்வெளிகள், வாகனங்களில் பனிபடிந்திருந்தது. காலை 9.30 மணி வரை குளிர் வாட்டி எடுத்தது. மாலை 5.30 மணிக்கெல்லாம் மீண்டும் பனி இறங்கத் தொடங்கிவிட்டது. மாலை 6.30 மணிக்கெல்லாம் இருள் சூழ்ந்தது. கட்டடத்தில் புகை மூட்டம் ஏற்பட்டது போல் பனி மூட்டம் இருந்தது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி பயணித்தன.

இன்று புதிய காற்றழுத்தம்
இந்த நிலையில் இன்றைய தினம் தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வரும் 19 ஆம் தேதி அல்லது 20ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வெதர்மேன் போஸ்ட்
இந்த நிலையில் இந்த பனி மூட்டம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் ஒரு புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார். அதில் வடகிழக்கு தமிழகம், தமிழகத்தின் உள்மாவட்டங்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு பனிமூட்டமாகத்தான் இருக்கும் என கூறி பனி விழும் மலர்வனம் பாடல் வரிகளை பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிலந்தி வலையில் பனித்துளிகள் தெரியும்படியான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

நெட்டிசன்கள்
இந்த போஸ்ட்டில் பிரதீப் ஜானிடம் அவரது பாலோயர்ஸ்கள் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார்கள். அதில் அடுத்த மழை எப்போது வரும், இன்று உருவாகும் காற்றழுத்தம் புயலாக மாறுமா, புயலாக மாறினால் அது எந்த பகுதிக்கு செல்லும் போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர். அப்போ துணி காயாதுனு சொல்லுங்கள் என சிலர் நகைச்சுவையாக கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஏற்கெனவே உருவான காற்றழுத்தத்தால் சீர்காழி மிகவும் மோசமடைந்தது. தற்போது புயல் உருவாகினால் எந்த பகுதி பாதிக்கப்படுமோ என விவசாயிகளும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளார்கள்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications