ஒரே நாளில்.. பல குடும்பங்களை இன்ப அதிர்ச்சியில்.. ஆழ்த்திய தமிழக மின்சார வாரியம்.. அசத்தல்!
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் புதிய பணியிடங்களுக்கான உத்தரவை தமிழக அரசு நேற்று வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. மின்சார வாரியத்தில் பல முக்கியமான அறிவிப்புகள் தினம் தினம் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் முக்கியமான ஒரு அறிவிப்பும் வெளியாக உள்ளது.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி பணிக்காலத்தின்போது இறந்த 311 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கி, மின்வாரிய ஓய்வூதியதாரர்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட புதிய கைபேசி செயலியினை அறிமுகப்படுத்தினார்.
அதோடு ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்நாள் சான்றிதழ்களை வழங்கினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமையகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின்சார ஊழியத்தில் பணியாற்றி. பணிக்காலத்தின் போது உயிரிழந்த 311 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட அரசு பதவியேற்ற 7.5.2021 முதல் இதுவரை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு பதவிகளுக்கான 2420 பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக மின்சார வாரியம் சார்பாக வெளியிடப்பட்ட பணி ஆணை:
நேற்று வழங்கப்பட்ட 311 பணி நியமன ஆணைகளை சேர்த்து மொத்தம் 2731 பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழக்கப்பட்டுள்ளது. மேலும், அகில இந்திய அளவில் தமிழ்நாட்டின் பொதுத்துறை நிறுவனம் முதல் முறையாக தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் புதிய கைபேசி செயலி புதுமையான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி வாயிலாக மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள்/குடும்ப ஓய்வூதியதாரர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே தங்களுக்கு தேவையான தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம் இச்செயலி மூலம் ஓய்வூதியதாரர்கள்/குடும்ப ஓய்வூதியதாரர்கள் கருணை ஓய்வூதியதாரர்கள் தங்களது மருத்துவ காப்பீட்டு அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
மாதாந்திர ஓய்வூதிய விவரம் வருடாந்திர ஓய்வூதிய அட்டவணை, வருமான வரி செலுத்துபவர்களுக்கான படிவம் 10 பதிவிறக்கம் மற்றும் அனைத்து பயனுள்ள தகவல்களும் இச்செயலியில் இனணக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் பெற ஆதார் எண்ணை KYC வாயிலாக இச்செயலி மூலம் எளிதாக பதிவு செய்யலாம்.
இந்த செயலி மூலம், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சுமார் ஒரு இலட்சம் ஓய்வூதியதாரர்கள் மண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் மின்சார ஓய்வூதியதாரர்கள் எளிதில் பயன்பெறும் வகையில் இந்த புதிய செயலியினை அறிமுகப்படுத்தி, மூன்று ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்நாள் சான்றிதழ்களை வழங்கினார் இந்திகழ்ச்சியில் மின்சார , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தவி.செந்தில் பாலாஜி மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்,பீலா வெங்கடேசன், இ.ஆ.ப. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருகதத்தருமார்.இ.ஆ.ப. தமிழ்நாடு மின் தொடரமைப்பு மேலாண்மை இயக்குநர் மணி இயக்குனர் (பகிர்மானம்) ஏ.ஆர் மஸ்கர்னஸ் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications