கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிர்வாகத்தில் மிக முக்கியமான நிதி சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுபான பெட்டிகளுக்கு பார்ட்டி ஃபண்டு என வசூலிக்கப்பட்டு வந்த கூடுதல் கட்டணத் தொகை இனி நேரடியாக அரசு கணக்கில் செலுத்தப்படும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அரசுக்கு மாதந்தோறும் சுமார் ரூ.100 கோடி வரையிலும், ஆண்டுக்கு ரூ.1,200 கோடி வரையிலும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என கூறப்படுகிறது.

டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. இருப்பினும், மதுபான விநியோக சங்கிலியில் சில கட்டணங்கள் அரசின் கணக்கில் சேராமல் வேறு வழிகளில் வசூலிக்கப்பட்டு வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

TASMAC

இந்த நிலையில் அந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுவரை மதுபான உற்பத்தியாளர்களிடம் இருந்து மதுபான பெட்டிகளுக்கு தனி கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தது

டாஸ்மாக்

அதன்படி, ஹாட் மதுபான பெட்டிக்கு ரூ.90, பீர் பெட்டிக்கு ரூ.40, ஒயின் பெட்டிக்கு ரூ.20 என்ற அடிப்படையில் கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வகையில் மாதந்தோறும் சுமார் ரூ.100 கோடி வரை வசூலாகி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த தொகை முழுமையாக அரசு வருவாயாக பதிவு செய்யப்படவில்லை என்ற விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் பல ஆண்டுகளாக நிலவி வந்தன.

அரசு கஜானா

இனி விஜய் அறிவித்துள்ள புதிய நடைமுறையின் கீழ் இந்த கட்டணங்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக அரசு கணக்கில் செலுத்தப்படும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இதுவரை கண்காணிப்புக்கு அப்பால் இருந்ததாக கூறப்படும் நிதி முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட உள்ளது. அரசு தரப்பில் கணக்கிடப்பட்டுள்ள மதிப்பீட்டின்படி, இந்த மாற்றம் மூலம் மாதந்தோறும் ரூ.100 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும். ஆண்டு முழுவதும் பார்க்கும்போது ரூ.1,200 கோடி வரையிலான கூடுதல் வருவாய் அரசின் கஜானாவில் சேரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

டாஸ்மாக் சீர்திருத்தம்

நிதி வசூல் முறையில் மாற்றம் மட்டுமின்றி, டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, டாஸ்மாக் கடைகளில் அதிகமாக எழும் புகார்களில் ஒன்றான எம்.ஆர்.பி விலையை விட கூடுதலாக பணம் வசூலிக்கும் நடைமுறையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்காக கண்காணிப்பு அமைப்புகள் வலுப்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மது விற்பனை

அதேபோல், 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்ற விதிமுறையை கடுமையாக அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. வயது சரிபார்ப்பு நடைமுறைகள் மேலும் தீவிரப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. பயன்படுத்தப்பட்ட கண்ணாடி பாட்டில்களை முறையாக சேகரித்து மறுசுழற்சி செய்வதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பதே இதன் நோக்கமாகும்.

தமிழக நிதிநிலை

இதற்காக டாஸ்மாக் கடைகள் மற்றும் கிடங்குகளில் தனி கண்காணிப்பு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ்மாக் நிர்வாகத்தில் நிதி பிரச்சினையை தடுக்கவும், அரசுக்கு வர வேண்டிய வருவாய் முழுமையாக அரசு கணக்கில் சேர்வதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மாதத்திற்கு ரூ.100 கோடி என்ற அளவில் கூடுதல் வருவாய் கிடைக்கும் சூழல் உருவாகியிருப்பது மாநில நிதிநிலைக்கு சாதகமாக அமையும் என்கின்றனர் அதிகாரிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+