குடிமகன்கள் கவனத்திற்கு... நாளை டாஸ்மாக் கடைகள் இல்லை.. மதுரை ஹைகோர்ட் உத்தரவு
நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தேச பிதா மகாத்மா காந்தி மறைந்த தினத்தையொட்டி நாளை தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரத்தீஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், தான் வசித்து வரும் விளவங்கோடு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறாக இருப்பதாகவும், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

டாஸ்மாக் கடைகள்
மேலும் ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி நினைவு தினம் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை நாளை மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் ரத்தீஷ் தெரிவித்திருந்தார்.

மதுரை ஹைகோர்ட்
இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் எதிர்மனுதாரராக, மதுவிலக்கு ஆயத்தீர்வை உள்துறை செயலரை நீதிமன்றமே முன்வந்து தாமாக சேர்த்து கொண்டது.

காந்தி நினைவு தினம்
காந்தி ஜெயந்தியை போன்று, காந்தி நினைவு தினத்திலும் மதுக்கடைகள் மூடப்படுகிறதா என நீதிபதிகள் அப்போது கேள்வி எழுப்பினர். பின்னர், நாளை காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதால், நாளை ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

18-ம் தேதி ஒத்தி வைப்பு
மேலும், மதுக்கடைகள் மூடியது தொடர்பான அறிக்கையை வருகிற 18ம் தேதிக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி அன்றைய தினத்துக்கு இந்த வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications