குடிமகன்கள் கவனத்திற்கு... நாளை டாஸ்மாக் கடைகள் இல்லை.. மதுரை ஹைகோர்ட் உத்தரவு
நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தேச பிதா மகாத்மா காந்தி மறைந்த தினத்தையொட்டி நாளை தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரத்தீஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், தான் வசித்து வரும் விளவங்கோடு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறாக இருப்பதாகவும், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

டாஸ்மாக் கடைகள்
மேலும் ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி நினைவு தினம் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை நாளை மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் ரத்தீஷ் தெரிவித்திருந்தார்.

மதுரை ஹைகோர்ட்
இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் எதிர்மனுதாரராக, மதுவிலக்கு ஆயத்தீர்வை உள்துறை செயலரை நீதிமன்றமே முன்வந்து தாமாக சேர்த்து கொண்டது.

காந்தி நினைவு தினம்
காந்தி ஜெயந்தியை போன்று, காந்தி நினைவு தினத்திலும் மதுக்கடைகள் மூடப்படுகிறதா என நீதிபதிகள் அப்போது கேள்வி எழுப்பினர். பின்னர், நாளை காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதால், நாளை ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

18-ம் தேதி ஒத்தி வைப்பு
மேலும், மதுக்கடைகள் மூடியது தொடர்பான அறிக்கையை வருகிற 18ம் தேதிக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி அன்றைய தினத்துக்கு இந்த வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications