டாஸ்மாக் கடைகளுக்கு மொத்தமாய் பூட்டு.. காலவரையின்றி மூடப்படும் பார்கள்! குடிகாரர்களுக்கு ஷாக் செய்தி
சென்னை: தமிழகம் முழுவதும் இருக்கும் குடிகாரர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. பனி நிரந்தரம் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்கள் நாளை பிப்ரவரி 17ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உள்ள மதுக் கடைகள் காலவரையின்றி மூடப்பட உள்ளது.
தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை கட்டுப்பாட்டில் டாஸ்மாக் நிறுவனம் இயங்கி வருகிறது. மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான சில்லறை மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

தினசரி சில்லறை விற்பனை மூலம் அரசு பெரும் வருவாய் ஈட்டுகிறது. பொதுவாக ஒரு நாளைக்கு ரூ.100 கோடிக்கும் மேற்பட்ட வருவாய் கிடைப்பதாக கணக்கிடப்படுகிறது. புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழா காலங்களில் விற்பனை மேலும் பல மடங்கு அதிகரிப்பது வழக்கம்.
டாஸ்மாக் ஊழியர் போராட்டம்
குறிப்பாக தீபாவளி காலத்தில் சில நாட்களில் மட்டும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான விற்பனை நடைபெறுவது வழக்கமான நிகழ்வாகும். இதனால் டாஸ்மாக் நிறுவனம் மாநில அரசின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 180 மில்லி, 360 மில்லி, 720 மில்லி போன்ற அளவுகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
டாஸ்மாக் வேலைநிறுத்தம்
பணி நிரந்தரம், ஓய்வூதிய வசதி, பணிநிலைத்தன்மை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்திற்கு பல தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. தொழிலாளர் அமைப்புகளான சிஐடியு மற்றும் ஏஐடிசி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த இயக்கத்தை முன்னெடுத்து வருகின்றன. போராட்டத்தின் அடுத்த கட்டமாக, மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
மதுக்கடை மூடல்
அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வராததால், போராட்டத்தை தீவிரப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரிடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த அறிவிப்பின்படி, பிப்ரவரி 17ம் தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் இருப்பதுடன், கடைகளை மூடி சாவிகளை நிர்வாகத்திடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த முடிவு நடைமுறைக்கு வந்தால், மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகள் செயல்படாமல் போகும் சூழல் உருவாகும்.
தமிழக மதுபான கடைகள்
இந்த அறிவிப்பு வெளியானதும் குடிகாரர்கள் மத்தியில் பல்வேறு எதிர்வினைகள் வெளிப்பட்டுள்ளன. குறிப்பாக மதுபானம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் முன்னெச்சரிக்கையாக வாங்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில இடங்களில் விற்பனை தாறுமாறாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மறுபுறம், இந்த போராட்டத்தை தடுக்க டாஸ்மாக் நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அரசுக்கு வருவாய் இழப்பு
அரசுக்குவருவாயை அள்ளித் தரும் முக்கிய துறையாக இருப்பதால், இந்த டாஸ்மாக் வேலைநிறுத்தத்தால் பல கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு தரப்பில் உடனடி பேச்சுவார்த்தை நடத்தப்படுமா, அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுமா என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகவில்லை. மேலும், இந்த போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருமித்தமாக பங்கேற்பார்களா என்பது குறித்தும் தெளிவாகவில்லை. குறிப்பாக அண்ணா தொழிற்சங்கம் சில அமைப்புகள் இதில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வியும் நிலவுகிறது.
-
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்?












Click it and Unblock the Notifications