வரி விலக்கு! தமிழக அரசின் புதிய வரிச்சலுகை – வாகன ஓட்டிகளுக்கு இனி ஜாலி
சென்னை: நீண்ட காலத்தில் செலவுச்சுமை குறைந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஒரு நிலையான போக்குவரத்து தீர்வாக மின்சார வாகனங்கள் பார்க்கப்பட்டு வருகின்றன.. இந்நிலையில், வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அது என்ன தெரியுமா?
சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் விதமாகவும், பெட்ரோல், டீசலுக்கு பதிலாக பேட்டரியில் ஓடும் வாகனங்கள், சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்தும், மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியபடி உள்ளன. அதனால்தான் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்தும் ஆர்வம் மக்களிடம் பிரபலமாகி வருகிறது.

மின்சார வாகனங்கள் பயன்பாடுகள்
உலகம் முழுவதுமே தற்போது இ வாகனங்கள் அதிகரித்தபடி உள்ளது.. இந்தியாவிலும் மின்சார வாகனங்களின் தேவை பெருகி கொண்டிருக்கிறது.. இதில் நம்முடைய தமிழகம் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் முன்னிலையில் உள்ளது.. இதற்காகவே பல நிறுவனங்கள் இ-வாகனங்களை உற்பத்தி செய்ய அதீத ஆர்வத்தை காட்டி வருகின்றன.
காரணம், பெட்ரோல், டீசல் வாகனங்களை போல புகை வெளியீடு இல்லாததால் காற்று மாசு மின்சார வாகனங்கள் மூலம் குறைகிறது... இதனால் நகரங்களில் சுவாசக் கோளாறுகள், ஆரோக்கிய பாதிப்புகள் குறைய வாய்ப்பு உள்ளது.
இதற்காகும் செலவும் மிகவும் குறைவாக இருக்கும்... எரிபொருள் விலை உயர்வுகள் மின்சார வாகனங்களை பாதிக்காது.. முக்கியமாக, இந்த வாகனங்களுக்கு வீட்டிலேயே அல்லது சார்ஜிங் ஸ்டேஷன்களில் குறைந்த செலவில் சார்ஜ் போட்டுக் கொள்ள முடியும்... பராமரிப்பும் எளிதாக இருக்கும்.. ஏனென்றால், இன்ஜின் ஆயில், கிளட்ச் போன்ற தேய்மானம் தரும் பார்ட்ஸ்கள் இதில் இல்லை.
தமிழக அரசு வரி சலுகைகள்
அதேபோல இந்த ரக வாகனங்களை இயக்கும்போது சத்தமும் பெரிதாக வராது.. இதனால் ஒலி மாசு குறையும்.. இதுபோக அரசு தரும் சலுகைகள், பதிவு கட்டண குறைப்பு, வரி தள்ளுபடிகள், போன்றவையும் மின்சார வாகனங்களை வாங்குவதையும் பயன்படுத்துவதையும் மேலும் ஊக்குவிக்கின்றன.
எனவேதான், மக்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு, மீண்டும் ஒரு அதிரடி அறிவிப்பை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.. தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
"மின்சார வாகனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த வரி விலக்கு சலுகையானது இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. இந்த நிலையில், இந்த 100 சதவீதம் வரி விலக்கானது வருகிற ஜனவரி 1-ந்தேதி (நாளை) முதல் 2027-ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி வரை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.
வரி விலக்கு - அரசாணை
இந்த வரி விலக்கு சலுகையானது, இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. இந்த நிலையில், இந்த 100 சதவீதம் வரி விலக்கானது வருகிற ஜனவரி 1-ந்தேதி (நாளை) முதல் 2027-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வரை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.
இந்த வரி விலக்கு சலுகையானது, மத்திய மோட்டார் வாகன விதிகளின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான போக்குவரத்து வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள் என அனைத்து வகை மின்சார வாகனங்களுக்கும் பொருந்தும்.
மின்சார வாகனக் கொள்கை
தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்து வருகிறது. 2025-ம் ஆண்டில் இது சுமார் 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த வேகத்தைத் தக்க
வைக்கவும், 'தமிழ்நாடு மின்சார வாகனக்கொள்கை 2023'-ன் நோக்கங்களை எட்டவும், வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் போக்குவரத்து ஆணையரின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் மின்சார வாகனங்களை வாங்குவோர் சாலை வரி செலுத்துவதில் இருந்து முழுமையாக விலக்கு பெறுவர்" என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications