பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே?
சென்னை: இந்திய பொருளாதாரத்தின் முக்கிய தூணாக இருந்து வரும் ஐடி சேவைத் துறை ஏஐ மூலம் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வரும் வேளையில், நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கியுள்ளது. ஒருப்பக்கம் ஏஐ தொழில்நுட்ப சேவையில் இறங்குவதற்கு உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், லட்ச கணக்கான ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் இதற்கான பெரும் நிதி ஆதாரம் தேவை. இதேவேளையில் தொடர்ந்து லாபகரமாகவும் விளங்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் நாட்டின் அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் தங்களது பென்ச் ஊழியர்கள் மீது கவனத்தை திருப்பினர். இந்திய ஐடி நிறுவனங்களுக்கு நீண்ட காலமாக பாதுகாப்பு வலையமாக இருந்த 'பெஞ்ச் ஊழியர்கள்' (Bench employees) முறையில் பெரிய மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக் மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய டாப் ஐடி சேவை நிறுவனங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெஞ்ச் ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 75,000 பேர் குறைக்கப்பட்டு உள்ளனர். 2 வருடத்திற்கு முன்பு இந்த 5 முன்னணி நிறுவனத்தில் மொத்தம் 3 லட்சம்மாக இருந்த பென்ச் பணியாளர் தற்போது சுமார் 2.25 லட்சமாக சரிந்துள்ளனர்.
இந்திய ஐடி நிறுவனங்களை பொருத்த வரையில் பென்ச் ஊழியர்கள் என்பது தனி வலிமையாக பார்க்கப்பட்டது. புதியாக திட்டங்கள் பெரும் போதும் உடனடியாக ஊழியர்களை நியமிக்க முடியும் வாய்ப்பை இந்த பென்ச் பிரிவு அளித்தது. ஆனால் தொழில்நுட்ப மாற்றம், ஏஐ வளர்ச்சி, புதிய திட்டங்கள் பெறுவதில் போராட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த 2 வருடமாக பென்ச் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து வருகிறது.
முன்பெல்லாம் மொத்த ஊழியர்கள் பட்டியலில் 20% க்கும் மேல் இருந்த பெஞ்ச் விகிதம், தற்போது 8% முதல் 15% வரையிலான அளவிற்கு குறைந்துள்ளது. சில நிறுவனத்தில் 8-12% வரையில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்திய ஐடி நிறுவனங்கள் தேவைக்கேற்ப பணியாளர்களை பயன்படுத்தும் திசையில் நகர்கின்றன.
பல ஆண்டுகளாக, ஐடி நிறுவனங்கள் திட்டங்கள் தொடங்குவதற்கு முன்பே பணியாளர்களை நியமித்து, பெஞ்ச் கையிருப்பில் வைத்திருந்தன. இதனால் ப்ராஜெக்ட்கள் தொடங்கும் போது உடனடியாக ஊழியர்கள் கிடைத்தனர். ஆனால் தற்போது சந்தை வளர்ச்சி மந்தமடைந்ததும், திறன் தேவைகள் மாறியதும், இந்த முறை அவசியமற்றதாகவும் மாறியுள்ளது.
இதற்கு ஏற்றார் போல் நிறுவனங்களும் பென்ச் ஊழியர்களின் பென்ச் காலத்தை குறைத்து புதிய திட்டத்தில் உடனடியாக சேரவும், எதிர்காலத்திற்கும் - நிறுவனத்தின் வர்த்தகத்திற்கும் தேவையில்லாத திறன்களை வைத்துள்ள ஊழியர்களை பென்ச் பிரிவுக்கு மாற்றி புதிய தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற்று பணியில் அமர்த்துவதும் அதிகரித்துள்ளது.
- ராயபுரத்தை கேட்ட ஆளூர் ஷாநவாஸ்.. டீலில் விட்டது ஏன்? திருமாவளவன் சொன்ன பாயிண்ட்! இதுதான் காரணம்
- திருமாவளவனுக்கு தெரியும்.. சீட் கொடுக்காதது பற்றி உடைத்து பேசிய ஆளூர் ஷாநவாஸ்!
- இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ்
- Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு?
- 176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு
இதன் மூலம் சில எண்ணிக்கை ஊழியர்கள் வெளியேற்றப்பட்டாலும், பெரும்பாலான ஊழியர்களின் திறன் வளர்ச்சி அடைந்துள்ளது மறுக்க முடியாது. இதேபோல் பென்ச் ஊழியர்கள் புதிய தொழில்நுட்பத்தில் பயற்சி பெறுவதால் வெளியில் இருந்து புதிதாக ஊழியர்களை நியமிக்க வேண்டிய எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
இப்படி பல நிறுவனங்கள் பெஞ்ச் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. சில நிறுவனங்கள் பெஞ்ச் விகிதத்தை தற்போதைய அளவை காட்டிலும் 1-1.5% அளவிற்கு குறைக்க இலக்கு வைத்துள்ளன.
உதாரணமாக, டிசிஎஸ் நிறுவனத்தில், ஒரு பணியாளர் ஆண்டுக்கு அதிகபட்சம் 35 நாட்கள் மட்டுமே பெஞ்சில் இருக்க அனுமதிக்கப்படுகிறது. அதன் பின்னர் செயல்திறன் மதிப்பீடு நடைபெறுகிறது. திட்டங்களில் சேர முடியாத பணியாளர்கள் வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
இதே வேளையில் இத்தகைய மாற்றம் தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்ற கேள்வி எழுகிறது. தற்போது ஒட்டுமொத்த ஐடி துறை வேலைவாய்ப்பு முறையை மாறிவருகிறது. வளர்ச்சி மீண்டும் அதிகரித்தாலும், பழைய அளவிலான பெஞ்ச் அமைப்பு திரும்ப வாய்ப்பு குறைவு என்பது தான் சந்தையின் கணக்கு.
-
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!













Click it and Unblock the Notifications