ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்து ரத்து.. சென்னைல செம மழையாமே! ஸ்டாலின் புறக்கணிப்பதா சொன்னாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை காரணமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிவித்து உள்ளது.

ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும் தமிழ்நாட்டின் ஆளுநர் சார்பில் ஆளுநர் மாளிகையில் மாலை தேநீர் விருந்து வழங்கப்படுவது வழக்கம். இதில் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் கட்சியினர், பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் என பலர் கலந்துகொள்வது வழக்கம்.

Tea party by Governor RN Ravi on Independence Day canceled due to rain

அந்த வகையில் நாளை இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலருக்கு ஆளுநர் மாளிகை அழைப்புக் கடிதம் அனுப்பியது.

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படாது என்று அண்மையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது, நீட் தேர்வால் மாணவர் ஜெகதீசன் மற்றும் அவரது தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "குமரிக் கடல் முதல் இமயப் பெருமலை வரை வாழும் மக்கள் ஒன்றுபட்ட சிந்தனையுடன் போராடிப் பெற்றதே இந்திய நாட்டின் விடுதலை ஆகும். அப்போது வாழ்ந்த முப்பது கோடி மக்களும் நாட்டு விடுதலைக்காகப் போராடியதன் விளைவே 1947 ஆகஸ்ட் 15 அன்று கிடைத்த வெற்றிச் செய்தி. இன்று, நாம் இந்தியத் திருநாட்டின் 77 ஆவது விடுதலை இதற்காகத் தியாகம் செய்த நாளைக் அனைவரது கொண்டாடுகிறோம் என்றால், போராட்டத்துக்கும் தலைவணக்கம் செலுத்தவே! போராடிப் பெற்ற விடுதலையை எந்நாளும், எச்சூழலிலும் போற்றிப் பாதுகாப்பதே அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி ஆகும்.

விடுதலை அடைவதற்கு முன்பே, 'ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்' என்று அனைவரையும் பாடச் சொன்னார் மகாகவி பாரதியார். விடுதலை பெற்ற இந்தியாவானது, அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் இந்தியாவாகத்தான் இருக்கும் என்று அந்தத் தமிழ்க்கவி கனவு கண்டார். நாட்டின் 77 ஆவது விடுதலை நாளைக் கொண்டாடும் நேரத்தில், சில நாட்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது தந்தை செல்வசேகர் ஆகிய இருவரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி, நம் முன்னோர் தம் இன்னுயிர் ஈந்து நமக்களித்த விடுதலை, எல்லோருக்குமானதா அல்லது வசதி படைத்த வெகு சிலருக்கானதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

அரியலூர் அனிதாவில் தொடங்கி இதுவரை விலைமதிப்பில்லா பல மாணவச் செல்வங்களின் உயிர்களை, நீட் தேர்வு முறை காரணமாக தமிழ்நாட்டில் நாம் இழந்திருக்கிறோம். இவர்களின் மரணங்கள் எழுப்பும் தார்மீகக் கேள்விகள், நமது மனச்சாட்சியை உலுக்கி வருகிறது. இரக்கமற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி: ஆனால், ஏழை எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர், அவர்தம் பெற்றோரின் கனவுகளை, எதிர்கால நல்வாய்ப்புகளை இழந்து வரும் நிலையை உணர மறுத்து, தமிழ்நாட்டு ஆளுநர் இரக்கமற்ற வகையில் பேசி வருகிறார்.

'நீட் தேர்வு விலக்குக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன். அந்த அதிகாரம் எனக்கு இருந்தால் நிச்சயம் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன்' என்று பொதுவெளியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது தமிழ்நாட்டு மாணவர்களையும், இளைஞர்களையும் அதிர்ச்சி ஆண்டுகளாக கொச்சைப்படுத்தும் வகையில் பேசுகிறார். ஜனாதிபதிக்கு கடிதம்: தமிழ் மக்களைப் பற்றி அக்கறையுள்ளோர், தமிழர் உயிர் துறப்பதைக் கண்டு கலங்குவர்.

ஆனால், ஆளுநர் ரவியின் செயல்பாடுகள், 'அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை' என்பது போல உள்ளது. இந்த நிலை மாறவே, நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, சட்டம் இயற்றி, தமிழ்நாடு அரசு, மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது. மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள், இதற்கு ஒப்புதல் வழங்கக் கோரி, இன்று (14-8-2023) கடிதம் அனுப்புகிறேன்.

ஆளுநர் அவர்கள், அரசியல் ரீதியாக திராவிடம், ஆரியம், திமுக, திருவள்ளுவர், வள்ளலார், சனாதனம் பற்றிப் பேசி வருவதை நாங்கள் மதிக்கவில்லை. அது கபட வேடம் என்பதை அறிந்தே இருக்கிறோம்; ஆரியப் புலம்பலாக ஒதுக்கித்தள்ளுகிறோம். ஆனால், ஏழை எளிய, விளிம்பு நிலை அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை அப்படித்தான் சிதைப்பேன் என்று நியமனப் பதவியில் இருக்கும் ஒரு ஆளுநர் கொக்கரிப்பார் என்றால், இது கல்வித் துறை மீது நடத்தப்படும் சதியாகவே கருதுகிறோம்.

Tea party by Governor RN Ravi on Independence Day canceled due to rain

தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் எங்களுக்கு முக்கியமானது. நாங்கள் இந்த மாநிலத்திற்கு, இந்த ஆண்டு வந்து, அடுத்த ஆண்டு செல்பவர்கள் அல்ல. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ் மக்களுக்காக என்றென்றும் உரிமைக் கழகம்தான். குரலை எழுப்பும் ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

பல்கலைக் கழகங்களைச் சிதைத்தும் - உயர் கல்வித் துறையைக் குழப்பியும் - தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி தராமலும் இதன் உச்சமாக தமிழ்நாட்டு மாணவர்களை, பெற்றோர்களை, அவர்களது எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் பேசி வரும் ஆளுநரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன் அடையாளமாக ஆகஸ்ட் 15 அன்று, ஆளுநர் மாளிகையில், அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேநீர் விருந்தினைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்து உள்ளன. இந்த நிலையில் தேநீர் விருந்து கனமழை காரணமாக ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிவித்து உள்ளது. ஆளுநர் மாளிகை புல் வெளியில் தண்ணீர் தேங்கி இருப்பதாக வேறொரு நாளில் இந்த தேநீர் விருந்து நடத்தப்படும் என்றும் அறிவித்து உள்ள ஆளுநர் மாளிகை, விரைவில் அதற்கான தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+