Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி விடாத கதை! பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மீது ஆசிரியர்கள் காட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி விடமாட்டார் போலவே என்ற சொல்லாடலுக்கு ஏற்ப தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் முனைப்பு காட்டினாலும், அதிகாரிகள் சிலர் அவருக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்களோ என ஆசிரியர்கள் சங்கத்தினர் சந்தேகம் கிளப்பியுள்ளனர்.

கல்வி செயற்பாட்டாளரும், அரசுப் பள்ளி ஆசிரியருமான உமா மகேஸ்வரியிடம் ஆசிரியர்கள் போராட்டம் பற்றி ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. அப்போது தன்னிடம் ஆசிரியர்கள் சங்கதினர் பகிர்ந்து கொண்ட வேதனையை நமக்கு பதிவாகவே அனுப்பி வைத்தார். ஆசிரியர் சங்கத்தை சேர்ந்தோர் கூறிய விவரம் வருமாறு;

Teachers are angry with school education officials

"பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் நாங்கள் தொடர்ந்து போராட வேண்டிய சூழல் வந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எங்களை அழைத்துப் பேசினார். அப்போது எங்கள் கோரிக்கைகள் குறித்து அமைச்சரிடம் பேசிய வகையில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை பிறந்தது. இதற்கு முன்பும் பல முறை அமைச்சரைச் சந்தித்து எங்கள் கோரிக்கைகள் தொடர்பாகப் பேசியுள்ளோம். அப்போதும் அமைச்சரின் பதில் எங்களுக்குச் சாதகமாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் எங்கள் கோரிக்கைகள் மீது எந்தவிதமான அறிவிப்பும் வெளிவரவில்லை.''

''அமைச்சருடனான பேச்சுவார்த்தையின்போது உடனிருக்கும் அதிகாரிகள், அமைச்சர் முன்னிலையில் ஒரு மாதிரியும் அவர்களைத் தனியே சந்திக்கும் போது வேறு மாதிரியும் பேசுகின்றனர். அமைச்சர் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முனைந்தாலும் அதிகாரிகள் அதற்குத் தடையாக இருக்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, அவர்கள் இந்த அரசுக்கு எதிராகச் செயல்பட எங்களைத் தூண்டி விடுகின்றார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.''

''பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளைக் கேட்டால் 'உங்கள் கோரிக்கையை நிதித்துறைக்கு அனுப்பியுள்ளோம். அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று நிதித்துறையைக் கை காட்டுகின்றனர். ஆனால் நிதித்துறையிலிருந்து எங்களுக்குச் சாதகமான எந்த பதிலும் வரவில்லை. பள்ளிக் கல்வித்துறையும் நிதித்துறையும் சேர்ந்து அரசுக்கு எதிராக ஆசிரியர்களைத் திசை திருப்புகிறதா என்ற சந்தேகம் வலுக்கிறது. 'திமுக அரசு ஆசிரியர்களுக்கானது' என்ற நிலையை 'ஆசிரியர்களுக்கு எதிரானது திமுக அரசு' என்று மாற்ற அதிகாரிகள் முயல்கிறார்கள்" என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+