தெலுங்கானாவில் சந்திர சேகரராவுக்கு தான் அதிக இடங்கள்.. கருத்துக்கணிப்பில் தகவல்!
சென்னை: தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 17வது மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலையுடன் இறுதிக்கட்ட தேர்தல் நிறைவடைந்தது.
நாடு முழுவதும் பதிவான வாக்குகள் மே 23ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அனைத்துக்கட்ட தேர்தல்களும் நிறைவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
பெரும்பான்மையுடன் மீண்டும் பாஜக ஆட்சி.. காங்கிரஸ் கட்சிக்கு ஏமாற்றமே.. என்டிடிவி எக்ஸிட் போல்
அதன்படி தெலுங்கானாவில் ஆளும் சந்திரசேகர ராவ் தலைமையிலான டிஆர்எஸ் 12 முதல் 14 இடங்களைக் கைப்பற்றும் என நியூஸ் 18 கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. தெலுங்கானாவில் 17 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற்றது.