இந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா? ஷாக்கிங்!
தெலுங்கானாவின் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்.எல்.ஏ. ரமேஷ் சென்னாமனேனிவின் இந்திய குடியுரிமையை மத்திய உள்துறை அமைச்சகம் பறித்துள்ளது.
Recommended Video
சென்னை: தெலுங்கானாவின் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்.எல்.ஏ. ரமேஷ் சென்னாமனேனிவின் இந்திய குடியுரிமையை மத்திய உள்துறை அமைச்சகம் பறித்துள்ளது.
இந்திய குடியுரிமை சட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் முறையின்றி குடியேறி இருக்கும் மக்களை வெளியேற்ற மத்திய பாஜக அரசு இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
இதன் அடிப்படையில் அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையின் போது பல லட்சம் மக்கள் குடியுரிமையை இழந்தனர். தற்போது இதை நாடு முழுக்க கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

யார் எல்லாம்
இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை காரணமாக இஸ்லாமிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அசாமில் குடியுரிமையை இழந்தவர்களில் அதிகம் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தெலுங்கானாவின் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்.எல்.ஏ. ரமேஷ் சென்னாமனேனி தனது குடியுரிமையை இழந்துள்ளார்.

காரணம் என்ன
ஆம் இந்தியாவில் இரட்டை குடியுரிமை கிடையாது. வெளிநாட்டில் குடியுரிமை இருந்தால் இந்தியாவில் குடியுரிமை பெற முடியாது. இந்த நிலையில் ரமேஷ் சென்னாமனேனி ஐரோப்பிய நாடான ஜெர்மன் குடியுரிமை பெற்றவர் என்று புகார் எழுந்துள்ளது.

போலி ஆவணம்
அதோடு போலி ஆவணங்கள் மூலம், இந்திய குடியுரிமை பெற்றுள்ளார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. மிக முக்கியமாக, இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன்பாக ஓராண்டுக்கு மேல் அவர் இந்தியாவுக்குள் இல்லை. அதனால் அவருக்கு குடியுரிமை வழங்க முடியாது என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதனால் அவரின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது.

வழக்கு
வெமுலாவாதா தொகுதியில் இருந்து இவர் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வாகி உள்ளார். இந்த நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்வேன். நான் இந்திய குடிமகன் என்பதை கண்டிப்பாக நிரூபிப்பேன் என்று ரமேஷ் சென்னாமனேனி கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications