தமிழகம்: 12 இடங்களில் சதமடித்த வெயில்.. 3 நாட்களுக்கு அனல்காற்று நீடிக்கும்.. வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் 12 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் பகல் நேரத்தில் வெயிலும் மாலை நேரத்தில் மழையும் பெய்து வருகிறது. ஆனால் சென்னை உட்பட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கமும் அனல் காற்றும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. வேலூரில் 107, மதுரை, திருச்சியில் தலா 106, திருநெல்வேலி, கரூர் -பரமத்தி, சேலத்தில் தலா 104 மற்றும் நாகபட்டினம், நாமக்கல்லில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.
இதனிடையே வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருச்சி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
அப்போது மணிக்கு 50 கி.மீ., முதல் 60 கி.மீ., வரை காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை பெய்யாத இடங்களில் அடுத்த 3 நாளுக்கு அனல் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கடந்த 24 மணி நேரத்தில், சூளகிரி 6 செ.மீ., கொடநாட்டில் 4 செ.மீ., நத்தத்தில் 3 செ.மீ., மழை பெய்துள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications