நீட் தேர்வில் சாதித்த தென்காசி தாய், மகள்! சம்யுக்தாவுக்கு கோவை பிஎஸ்ஜி! அமுதவல்லிக்கு எந்த கல்லூரி?
சென்னை: மகளுடன் சேர்ந்து படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற தென்காசி பெண் எம்பிபிஎஸ் படிக்க விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்துள்ளார். அதே போல் அவரது மகள் சம்யுக்தா கிருபாளினிக்கு கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. படிப்பதற்கும் சாதிப்பதற்கும் வயது ஒரு தடை இல்லை என்பதும் விடாமுயற்சியும் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதும் இந்த சம்பவத்தின் மூலம் நாம் அறியலாம்.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமுதவல்லி (49). நீட் தேர்வுக்கு தனது மகள் சம்யுக்தா படிக்கும் போது தானும் நீட் தேர்வுக்கு தயாராகினார். அத்துடன் தாயும் மகளும் சேர்ந்து நீட் தேர்வு எழுதினர்.

அதில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும் வகையில் இருவரும் தேர்ச்சியும் பெற்றனர். இதைத் தொடர்ந்து நடந்த கலந்தாய்வில் பங்கேற்ற அமுதவல்லி, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடத்தை தேர்வு செய்தார்.
32 ஆண்டுகளுக்கு முன்பு 12 ஆம் வகுப்பு படித்த அமுதவல்லி, தனது மகளுடன் சேர்ந்து நீட் படித்து தேர்வான நிலையில் அவரது மகள் சம்யுக்தா கிருபாளினிக்கு அரசு கல்லூரியில் தனது அம்மாவுடன் சேர்ந்து படிக்க இடம் கிடைக்குமா என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சம்யுக்தாவுக்கு கோவை பிஎஸ்ஜி தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து சம்யுக்தா கூறுகையில் அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது.
நீட் தேர்வில் உதவியது போல் எனது தாயார் அமுதவல்லிக்கு மருத்துவ படிப்பில் ஏற்படும் சந்தேகங்களையும் களைய உதவுவேன் என சம்யுக்தா தெரிவித்திருந்தார். தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் மொத்தம் 3,835 இடங்களும், கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியில் 91 இடங்களும், ஐஆர்டி பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் 30 இடங்களும், 3 அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 195 இடங்களும் காலியாக இருந்தன.
அது போல் 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு, நிர்வாக ஒதுக்கீட்டில் மொத்தம் 3,302 இடங்களும் தனியார் பல்கலைக்கழகத்தில் அரசு ஒதுக்கீட்டில் 529 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 20 பல் மருத்துவக் கல்லூரியில் 1797 இடங்களும் காலியாக இருந்தன.
தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 7513 மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கும், நிர்வாக ஒதுக்கீட்டில் 2004 மாணவர்கள் சேர்வதற்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
-
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications