“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வந்தபோது "துரோகிகள்" என திமுகவினர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்தபோது திமுக - காங்கிரஸ் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சுதந்திரப் போராட்ட வீரர் காயிதே மில்லத்தின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. காயிதே மில்லத்தின் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் காயிதே மில்லத்தின் நல்லிணக்கத்தையும் புகழையும் சேர்க்கும் வகையில் பல்வேறு அரசு கல்லூரிகளுக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அதேபோல் நூலகத்திற்கும் அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Tension Erupts Between DMK and Congress Cadres During Selvaperunthagai Visit

இன்று சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசலில் உள்ள காயிதே மில்லத் துயிலிடத்தில் பல்வேறு கட்சியினர் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் விஜய் கலந்துகொண்டார். அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து எனப் பலரும் கொண்டனர்.

தொடர்ந்து திமுக சார்பில் மரியாதை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ் சார்பில் மரியாதை செலுத்துவதற்காக அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வந்திருந்த நிலையில் அவருடைய வருகைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் வந்தபோது திமுகவினர் சிலர் 'துரோகி... துரோகி...' என கோஷங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. சிறிய தள்ளும் முள்ளும் ஏற்பட்டது. 'தேர்தல் முடிந்தது நன்றி சொல்லக் கூட வரவில்லை இப்பொழுது வருகிறாயா..' என பலர் கூச்சலிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் திமுகவினர் மரியாதை செலுத்திவிட்டுச் சென்ற பின் தான் மரியாதை செலுத்துவதாக செல்வப்பெருந்தகை மரியாதை செலுத்தாமலேயே அங்கிருந்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து அங்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+