சென்னை ஐஐடி விடுதியில் பிஎச்டி மாணவியின் தாலி திருட்டு ... போலீஸ் விசாரணை
சென்னை: சென்னை ஐஐடி விடுதியில் பிஎச்டி மாணவியின் தாலி திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னை ஐஐடி சபர்மதி விடுதியில் தங்கி பிஎச்டி படித்து வருபவர் பவனி ஆத்தி( வயது 34). அறையிலிருந்த தனது கட்டிலில் 35 கிராம் எடையுள்ள தங்க தாலியை கழற்றி வைத்துவிட்டு துணிகளை துவைத்து விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது தாலி செயினை காணவில்லை.

பக்கத்து அறைகளில் தங்கி இருப்பவர்களிடம் கேட்டபோது , யாரும் உங்கள் அறைக்கு வரவில்லை என பதில் அளித்துள்ளனர். இதுதொடர்பாக பவனி ஆத்தி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் விடுதியை சுத்தம் செய்ய வரும் பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை ஐஐடி விடுதியில் கைவரிசை காட்டிய மர்ம நபரை கோட்டூர்புரம் போலீசார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications