Exclusive: நான் கெஞ்சிக் கேட்கிறேன்; இப்போதும் காலம் இருக்கிறது; மன்றாடும் தமிமுன் அன்சாரி!
சென்னை: ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் சாதி, மதம் அடிப்படையில் பாரபட்சம் இருக்கக் கூடாது என மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்திருக்கிறார்.
அண்ணா பிறந்தநாளையொட்டி முன் விடுதலை செய்யப்படும் ஆயுள் சிறைவாசிகளில் இஸ்லாமிய சிறைவாசிகளையும் விடுவிக்க வேண்டும் என முதலமைச்சரின் கரத்தை பற்றி கேட்டுக்கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் மனம் திறந்து பேசிய அவர்;

ஆயுள் சிறைவாசிகள்
''ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவதில் சாதி, மதம், வழக்குகளின் அடிப்படையில் பாகுபாடு காட்டவேண்டாம் என்பதை தான் கடந்த 5 ஆண்டுகளாக சட்டமன்றத்தில் வலியுறுத்தி வந்தேன். ஆனால் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் கூட அதை கேட்கவில்லை. முஸ்லீம் ஆயுள்தண்டனை சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அமைச்சர்களாக இருந்த சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோரிடம் பல முறை நான் நேரில் விவரம் எடுத்துக்கூறியும் அவர்கள் எதையும் செய்யவில்லை.''

நீதியை நிலைநாட்டுக
''இந்தச் சூழலில் இஸ்லாமியர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட கட்சி எனக் கருதப்படும் திமுக ஆட்சியிலாவது இந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் இந்த ஆட்சியிலும் கடந்த அதிமுக ஆட்சியை போலவே முஸ்லீம் ஆயுள்சிறைவாசிகள் முன் விடுதலை செய்யப்படாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. இப்படி செய்வார் ஸ்டாலின் என துளியும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கருணையின் அடிப்படையில், மனிதாபிமான முறையில் முதலமைச்சர் நீதியை நிலை நாட்ட வேண்டும் என கோருகிறோம்.''

அழுதுவிடுவீர்கள்
''ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை விவகாரத்தில் இப்போதும் காலம் கெட்டுவிடவில்லை. இப்போது நினைத்தாலும் முதலமைச்சரால் அரசாணையில் மாற்றம் செய்ய முடியும். மனிதாபிமானமும், துணிச்சலும் மிக்கவர் ஸ்டாலின் என்பதால் அவரிடம் இதை எதிர்பார்க்கிறோம். எடப்பாடி பழனிசாமி செய்த அதே தவறை ஸ்டாலினும் செய்துவிடக்கூடாது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்களின் குடும்பங்களை பார்த்தால் நீங்களே அழுதுவிடுவீர்கள், அந்தளவுக்கு சிதைந்து வேதனையில் தவித்து வருகிறது.''

கெஞ்சிக் கேட்கிறேன்
''ஒன் இந்தியா தமிழ் மூலம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நான் சொல்ல விரும்புவது இது தான், உங்களின் இரு கரங்களை பற்றி இந்த தமிமுன் அன்சாரி கெஞ்சி மன்றாடிக் கேட்பதாக இதை எடுத்துக்கொண்டு முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பான அரசாணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.''
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications