வெறுப்பு அரசியலை ஒதுக்குவோம்! ஜனநாயகத்தை பாதுகாப்போம்! தமிமுன் அன்சாரி குடியரசு தின வாழ்த்து!
சென்னை: நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்பு அரசியலை ஒதுக்கிவிட்டு ஜனநாயகத்தை காக்க குடியரசு தின நன்னாளில் அனைவரும் உறுதியேற்போம் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்திருக்கிறார்.
இந்திய அரசியலை கரையான்கள் மெல்ல அரித்து வருவது தமக்கு கவலையளிப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது;

சுதந்திர இந்தியா
சுதந்திர இந்தியாவின் 75 ஆம் ஆண்டில் நம் நாட்டின் 73 வது குடியரசு தின விழாவை கொண்டாடுகிறோம். சுதந்திரம் பெற்ற பிறகு, நம்மை நாமே ஆளும் வகையில் அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான சட்ட வல்லுனர் குழு தயாரித்த அரசியல் சாசன சட்டம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஜனவரி 26 தினமே நமது நாட்டின் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.

பல சவால்கள்
போராடி பெற்ற நமது சுதந்திரத்தின் லட்சியங்கள் இன்று அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள காலகட்டத்தில் பல சவால்களின் வழியே குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம்.கொரணா பெருந்தொற்றால் 84 சதவீத இந்தியர்களின் வருவாய் வீழ்ச்சியடைந்து, 4 கோடியே 60 லட்சம் இந்தியர்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
மறுபுறம் பெரும் கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை 102 விருந்து 142 ஆக உயர்ந்திருக்கிறது.இந்தியாவில் 45 சதவீத சொத்துக்கள் 10 பெரு முதலாளிகளிடம் அடைபட்டுக்கிடக்கிறது.எளிய மக்களை பற்றி கவலைப்படாத பொருளாதாரக் கொள்கைகள் பெரும் சமூக இடைவெளியை நம் நாட்டில் உருவாக்கியிருக்கிறது.

வெறுப்பு அரசியல்
குடியரசு இந்தியாவின் இன்றைய நிலை உழைக்கும் மக்களுக்கு நேர் எதிராக இருக்கிறது. மறுபுறம் இந்திய அரசியலை கரையான்கள் மெல்ல அரித்து வருவதும் கவலையளிக்கிறது. மக்களை பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியல், அமைதியை சீரழிக்கும் கும்பல் தாக்குதல்கள், சமூக நீதிக்கு எதிரான திட்டமிட்ட சதிகள் , சர்வாதிகாரத்தை நிலைநாட்ட முயலும் பெரும்பான்மைவாதம் என நாடு இக்கட்டான நிலையில் துயருற்றிருக்கிறது.

உறுதி ஏற்போம்
அன்பின் வழியாகவும், பரந்த மனநிலையுடன் கூடிய அணுகுமுறைகளாலும் நம்பிக்கையிழந்து வரும் மக்களுக்கு தைரியம் ஊட்டக் கூடிய மனிதநேய கடமைகளை ஆற்ற அனைவரும் தயாராக வேண்டிய காலம் இது.மதிப்பு மிக்க நமது மக்களாட்சி தத்துவங்களை எழுச்சி பெற செய்ய தயாராக வேண்டும். தேசத்தின் பன்முகத் தன்மையை நிலை நாட்டி ; பொருளாதார சமநீதியை வளர்த்தெடுத்து ; ஜனநாயகத்தை பாதுகாக்க இந்நாளில் உறுதியேற்போம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications