தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சியின் முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும் என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவிர்த்துள்ளார். திமுக ஆட்சியில் வாங்கிய கடனை விடவும், தவெக ஆட்சியில் குறைவாக கடன் பெற்று திட்டங்களை நிறைவேற்றினால், நான் பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறேன் என்று தங்கம் தென்னரசு சவால் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டின் நிதிநிலைமை குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று வெளியிட்டார். தமிழகத்தின் நேரடிக் கடன் ரூ.10 லட்சம் கோடியாக உள்ளது. இதனுடன் பொதுத்துறை நிறுவனங்களின் கடனான ரூ.3,18,176 கோடியையும் சேர்த்தால், தமிழ்நாட்டின் மொத்தக் கடன் ரூ.13.18 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

Thangam Thennarasu

கடந்த 2021-ல் ரூ.5 லட்சம் கோடியாக இருந்த மொத்தக் கடன், ஐந்து ஆண்டுகளில் ஏறத்தாழ ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு தனிநபர் மீதும் தலா ரூ.1,28,934 கடன் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வெள்ளை அறிக்கை தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை என்பது தமிழ்நாட்டுக்கு புதிது அல்ல. 2001 மற்றும் 2021ம் ஆண்டுகளில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், 2001ல் வெள்ளை அறிக்கை அதற்கு முந்தைய 10 ஆண்டுகளின் நிதி நிலை விபரங்களைக் கொண்டது.

2021ம் ஆண்டு வெள்ளை அறிக்கை அதற்கு முந்தைய 15 ஆண்டுகளின் நிதி நிலை விபரங்களை கொண்டது. ஆனால், தற்போது முந்தைய 5 ஆண்டுகளின் நிதி நிலை என கூறப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? யாரைக் காப்பாற்றும் முயற்சியாக அதற்கு முந்தைய அதிமுக அரசின் விபரங்கள் சொல்லப்படவில்லை?

இயலாமையை மூடி மறைக்க, வாக்குறுதிகளில் இருந்து தப்பிக்க தவெக அரசு, மக்களை ஏமாற்ற இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின் போதே தமிழக கடன் இரு மடங்காக உயர்ந்தது. அது 2016ல் ரூ.2 லட்சம் கோடியாகவும், 2011 ரூ.4.84 லட்சம் கோடியாகவும் உயர்ந்தது. இதன்படி ஒவ்வொரு 5 ஆண்டுகளும் தமிழக கடன் இரு மடங்காக உயரும்.

அதன்படி பார்த்தால், தவெக ஆட்சி ஒருவேளை 5 ஆண்டுகளை நிறைவு செய்தால், 5 ஆண்டு இறுதியில் தமிழ்நாடு அரசின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும். இதை ஒரு சவாலாகவே சொல்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு ஒவ்வொரு ஆண்டும் வாங்கிய சராசரி கடனை விட, தவெக அரசு குறைத்து வாங்கினால், நான் பொறுப்பில் இருந்தே விலகிவிடுகிறேன்.

எங்களிடம் புதிய திட்டம் எதையும் எதிர்பார்க்காதீர்கள் என்பதை சொல்லாமல் சொல்லவே ஆளுநர் உரைக்கு முன்பாகவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. நிறைவேற்ற இயலாத தேர்தல் வாக்குறுதிகளை அளித்து மக்களை நம்ப வைத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டோம். தற்போது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து தப்பிக்கவே இந்த வெள்ளை அறிக்கை.

எங்களிடம் எதுவும் கேட்காதீர்கள் என்று கூறி இயலாமையை மூடி மறைக்கும் உத்தி இது. பரந்தூர் விமான நிலையத் திட்டம் உள்பட தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும் மூலதன திட்டங்களை எல்லாம் நிறுத்தி வைத்துவிட்டு, திமுக அரசு மூலதன திட்டங்களுக்காக செலவிடவில்லை எனக் கூறுகிறது தவெக அரசு. காலை உணவுத் திட்டம் போன்ற தமிழ்நாட்டில் உள்ள பல மக்கள் நலத் திட்டங்கள் குஜராத்தில் கிடையாது.

நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.6 லட்சம் கோடி தேவைப்படும். உங்கள் ஆட்சி முடிவில் அரசின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும். இதையும் மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள். அப்போது என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதையும் பார்க்கத்தான் போகிறோம். அரசு கடன் வாங்குவது தவறு அல்ல, அந்தக் கடனை எப்படி மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்.

தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றும் என்பதை, பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்திலேயே எல்லோரும் பார்த்தோம் இடைக்கால பட்ஜெட்டிலேயே அரசின் நிதி நிலைமையை தெளிவாக குறிப்பிட்டோம். அதற்குப் பிறகுதான் தவெக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. இப்போது வாக்குறுதிகளை நிறைவேற்ற வழியில்லாமல் காரணங்களைக் கூறி தப்பிக்கப் பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+